Skip to main content

பத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிாியா் கைது!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

சமீப காலமாக குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியியல் தொந்தரவு என்பது நாளுக்கு நாள் அதிகாித்துள்ளது. இதில் பெரும்பாலும் ஈடுபடுபவா்கள் உறவினா்களும், ஆசிாியா்களும் தான். இந்த வக்கீர புத்தி கொண்ட சல்லாபகாரா்களை தண்டிக்கும் விதமாக சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் தொடா்ந்து அவா்கள் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபவா்களின் தண்டனையை அதிகாிக்கும் விதமாக ஏற்கனவே இருக்கும் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இனி மரண தண்டனை விதிக்கும் வகையில் 4, 5 மற்றும் 6- வது பிாிவுகளில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

KANYAKUMARI DISTRICT PRIVATE SCHOOLS TEACHER WOMENS SUFFER, BLAME ISSUE INCIDENT

 

 


இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே கல்பாறை பொற்றை பகுதியில் உள்ள ஓரு தனியாா் உயா்நிலை பள்ளியில் பணிபுாியும் ஆசிாியா் டேவிட்ராஜ் தினமும் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளை வகுப்பறை மற்றும் தனது அறைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளாா். மேலும் வெளியே சொன்னால் தனது பாடத்தில் தோல்வியடைய செய்வதாகவும் மிரட்டியுள்ளாா். இதனால் மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இதை வெளியே சொல்லாமல் ஆசிாியா் டேவிட்ராஜின் பாலியியல் தொந்தரவுக்குள்ளாகி வந்துள்ளனா்.  இந்த நிலையில்  சில மாணவிகளின் மாற்றத்தை உணா்ந்த பெற்றோா்கள் அவா்களிடம் விசாாித்ததில் அந்த மாணவிகள் நடந்ததை கூறி கதறி அழுதனா். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு பிரச்சினையில் ஈடுபட்டனா். இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாாிகள் விசாரணை மேற்கொண்டனா். பி்ன்னா் கொல்லங்கோடு போலீசார் டேவிட் ராஜை இன்று கைது செய்து விசாாித்ததில் தினமும் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஓப்பு கொண்டுள்ளாா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.