களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளிலும் போலீசாருக்கு துப்பாக்கி தரப்பட்டுள்ளது. 303 ரைபிள் என்ற வகை துப்பாக்கியுடன் 37 சோதனைச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.