Skip to main content

குமாியில் மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதி

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

குமாியில் மருத்துவா்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அவதியடைந்தனா்.

         மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் என்.ஆா்.எஸ் மருத்துவ கல்லூாியில் இளநிலை மருத்துவா் முகா்ஜி என்ற இளைஞா் வன்முறையாளா்களால் தாக்கபட்டு தீவிர சிகிச்சை பிாிவில் இருந்து வருகிறாா். இதை தொடா்ந்து கொல்கத்தாவில் மருத்துவா்களின் போராட்டம் வெடித்துள்ளது.

 

k

           

இந்தநிலையில் மேற்கு வங்க மருத்துவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தொிவித்தும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவ மையங்களுக்கு பாதுகாப்பு கேட்டும் அதற்கு தேசிய அளவில் சட்டம் நிறைவேற்றிட வலியுறுத்தி நாடு தழுவிய மருத்துவா்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடந்தது. 

 

k

           

இதில் குமாி மாவட்டத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 150 தனியாா் மருத்துவமனை மருத்துவா்களும் 12 அரசு மருத்துவமனை மருத்துவா்களும் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினாா்கள். 

 

k

         

 மருத்துவா்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் பெரும்பாலான தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் சிகிச்சையின்றி கஷ்டப்பட்டனா். மேலும் உள் நோயாளிகள் கூட தொடா் சிகிச்சையளிக்க மருத்துவா்கள் இல்லாமல் கஷ்டப்பட்டனா்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாரத் மாதா கி ஜெ'- பாஜக மேடையில் முழங்கிய சரத்குமார்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
'Family monarch rule is happening in Tamil Nadu' - Sarathkumar speech

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

Next Story

ஐந்தாம் முறையாக தமிழகம் வரும் மோடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Modi is coming to Tamil Nadu for the fifth time

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இன்று அல்லது நாளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கன்னியாகுமரி வர இருக்கும் பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.