கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், கோட்டாட் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. ஏசுதாஸ், சுசீந்திரம் அக்கரை பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் தனது வீட்டில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த போலீஸார், அவரது வீட்டிற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.