Skip to main content

சம்பந்தமில்லாமல் ஒரு போலீஸ்காரரை கொன்றது ஏன்? விசாரணையில் அதிர வைத்த சம்பவம்!

Published on 13/01/2020 | Edited on 15/01/2020

குமரி -கேரள எல்லையான களியக்கா விளை போலீஸ் சோதனைச் சாவடியில் 8-ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனை தலையில் குல்லாய் அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து தப்பிச் செல்லும் காட்சி, சோதனைச் சாவடியின் அருகில் இருக்கும் பள்ளிவாசலில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ளது.

 

si



இரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அடுத்தநாள் காலையில் குற்றவாளிகளாக சந்தேகப்படும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.யூ. அமைப்பால் தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளான குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல்சமீம் (27), கோட்டார்- இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் (27) இருவரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

 

incident



தப்பி ஓடிய தீவிரவாதிகள் இருவரும் கேரள எல்லையின் தொடக்கமான இஞ்சிவிளையில் நிறுத்தியிருந்த டி.என்.57ஏ.என். 1559 என்ற ஸ்கார்பியோ வண்டியில் சென்றனர். அந்த வாகனம் கேரளாவை நோக்கிச் சென்றதா அல்லது தமிழகத்துக்குள் சென்றதா என்று பல சி.சி.டி.வி. காமிராவை சோதனை செய்தபோதும் தெரிய வரவில்லை.

 

incident



"பெங்களூருவில் இருந்து 4 தீவிரவாதிகளை தமிழக போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தத்தான் கேரளாவில் பதுங்கியிருந்த இந்த தீவிரவாதிகள் தமிழக எல்லையில் இருந்த போலீசாரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்' என்றனர் டிபார்ட்மென்ட்டில்.

இது குறித்த சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

குற்றவாளிகள் என போலீஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவானவர்களின் புகைப்படமா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல அந்த சி.சி.டி.வி. வீடியோவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடும் இருவரில் ஒருவர், தலையில் இருந்த குல்லாவை கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் எதற்காக அந்த குல்லாவைக் கழற்ற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.


போலீசார் குறிப்பிட்டிருக்கும் இந்த தீவிரவாதிகளில் அப்துல்சமீம் என்பவர் 18-6-2014-ல் சென்னையில் இந்து முன்னணி பொறுப்பாளரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் கொலை வழக்கிலும், 21-4-2013-ல் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோயிலைச் சேர்ந்த எம்.ஆர். காந்தி கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர். இதில் எம்.ஆர்.காந்தி வழக்கில் கோர்ட், அப்துல் சமீமை விடுதலை செய்தது. இதற்கு போலீசார் அப்பீல் செய்யாத நிலையில் எம்.ஆர். காந்தி அப்பீல் செய்திருக்கிறார்.

இதேபோல் கடந்த மாதம் 22-ஆம் தேதி எஸ்.ஐ.யூ. அமைப்பு குமரி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவ்பீக் மற்றும் இன்னொரு தீவிரவாதியான இளங்கடையைச் சேர்ந்த செய்தலி நவாஸ் வீடுகளில் டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் சோதனை செய்தது. இதில் தவ்பீக், மற்ற இரண்டு பேருக்கும் செல்போன் மற்றும் சிம்கார்டுகள் சப்ளை செய்தது தவ்பீக்கின் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


தற்போதைய கொலையில் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதிகளான முகம்மது சமி மற்றும் ஹௌசிக் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் கூறுகிறது. தமிழக டி.ஜி.பி. திரிபாதி 9-ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று கேரள டி.ஜி.பி.யிடம் தீவிரவாதிகளை இணைந்து பிடிப்பது சம்பந்தமாக பேசினார். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு வந்த திரிபாதி அங்கு பார்வையிட்டு விட்டு கொலை செய்யப்பட்ட வில்சனின் வீட் டுக்குச் சென்று அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.

கொலை செய்யப்பட்ட வில்சன் மே மாதம் பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது இரண்டு மகள்களில் ஒருவருக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சம்பந்தமில்லாமல் ஒரு போலீஸ்காரரை... அதுவும் கிறிஸ்தவரை கொன்றது ஏன்? உண்மையிலேயே தீவிரவாதிகளா? கடத்தல் மாஃபியாக்களா? என சர்ச்சையும், அது தொடர்பான விசாரணையும் தீவிரமாகியுள்ளது. விரைவில், என்கவுன்ட்டருக்கான துப்பாக்கிச் சத்தம் கேட்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.