கடந்த சில வருடங்களாக மது போதையைக் கடந்து மாற்றுப் போதையில் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது தமிழகம். இதில் சிக்கியிருப்பவர்கள் 14 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களே அதிகம் என்பதுவேதனையானது. கஞ்சா போதையில் நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் சிசிடிவி கேமராக்களில் சிக்கி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையிலிருந்த இரண்டு இளைஞர்கள் துணியால் முகத்தை மூடிக்கொண்டு கற்களை எடுத்து காரை தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரின் உரிமையாளர் சாகுல் ஹமீது போலீசாரிடம் புகாரளித்த நிலையில், போலீசார் கஞ்சா போதையில் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.