போலீஸ் அதிகாரி வில்சன் கொலை வழக்கில் குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம்... எஸ்.பி அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சன் என்ற காவல் அதிகாரிகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் 7 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

kaniyakumari incident

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, 7010363173 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், 220167 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கும்தகவல் தரலாம். குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த கொலை தொடர்பாக விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளிப்படையாக பேச முடியாது என்றும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

arrest Kanyakumari police
இதையும் படியுங்கள்
Subscribe