Skip to main content

புகாருக்குள்ளான விஏஓ பணியிடமாற்றம்;  விடுப்பு எடுத்த விஏஓக்கள்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

kaniyakumar vao incident vao take leave 

 

குமாி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் வருவாய் கோட்டங்களின் கீழ் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை, விளவங்கோடு, திருவட்டாா், கிள்ளியூா் என 6 தாலுகா அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த தாலுகா அலுவலகங்களின் கீழ் 188 கிராம நிா்வாக அலுவலா்கள் பணிபுாிந்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த மாதம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக இருந்த அலமேற்மங்கை கீழ்குளம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் மீது அந்த பகுதி மக்களிடம் இருந்து ஏராளமான புகாா்கள் வந்ததால் அவரை சூழால் கிராம நிர்வாக அலுவலராக அதிரடியாக மாற்றினார். இது மற்ற கிராம நிா்வாக அலுவலர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

இதை தொடர்ந்து குமரி மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் சாா் ஆட்சியா் அலமேற்மங்கையிடம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷின் இடமாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்  ஆனால் அவர் நடவடிக்கை எடுத்தது எடுத்தது தான் அந்த உத்தரவை திரும்ப பெற முடியாது என்று கூறி விட்டார். மேலும் சாா் ஆட்சியா் அலமேற்மங்கை சென்னைக்கு மாற்றலாகி சென்றதையடுத்து புதிய சார் ஆட்சியராக கௌசிக் பதவியேற்றாா்.

 

இந்த நிலையில் பொது மக்களிடம் இருந்து வந்த புகாரை வைத்து கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. ஆனால் வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் இடமிருந்து கிராம நிா்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பரிந்துரை கடிதம் எதுவும் அனுப்பவில்லை. பொதுமக்கள் கொடுத்த தவறான புகாாின் மீது தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் அதை ரத்து செய்ய வேண்டுமென்று சாா் ஆட்சியா் கௌசிக்கிடம் கிராம நிா்வாக அலுவலா்கள் மனு கொடுத்தனர். அவர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் விடுப்பு எடுத்து கொண்டு தொடர்ந்து 3 வது நாட்களாக சாா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும்  உடன்படவில்லை.

 

இதற்கிடையில் வார தொடக்கத்தில் இருந்து 3 நாட்களாக தொடர்ந்து கிராம நிா்வாக அலுவலா்கள் அலுவலகத்தில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தினமும் ஏராளமான மக்கள் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா போன்ற சான்றிதழ்கள் பதிவு செய்து விட்டு அதை பெற முடியாமல் அலுவலகங்களில் காத்துக் கிடக்கிறார்கள். எனவே கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.