Advertisment

நக்கீரன் குழுமத்துடன் இணைந்து கனிமொழி எம்.பி. நடத்திய கவிதை போட்டி! வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு!  

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.நக்கீரன் குழுமத்தின் இலக்கிய இதழான இனிய உதயம் பத்திரிகையுடன் இணைந்து, மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாளையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை நடத்தினார்.

Advertisment

நவம்பர் 29 முதல் டிசம்பர் 6 வரை நடைபெற்ற இந்தக் கவிதைப் போட்டியில், 16 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, 2-ம் பரிசாக ரூ.25,000, மூன்றாவதுபரிசாக ரூ.15,000, 4ம் பரிசாக ரூ.10,000, 5-ம் பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது.. மேலும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு புத்தக தொகுப்பு வழங்கப்பட்டது.

Advertisment

கனிமொழி நடத்திய இந்த, ‘மகாகவி பாரதியார் பிறந்தநாள் கவிதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற இளம் கவிஞர்களுக்கு, பாரதி பிறந்த எட்டயபுரத்திலேயே விழா நடத்தி பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் நக்கீரன் ஆசிரியர், இனிய உதயம் இணையாசிரியர் ஆரூர் தமிழ்நாடன், கவிஞர். ஆண்டாள் பிரியதர்ஷினி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

barathiyar kanimozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe