திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்டில் பழங்குடியினரின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டதாகக் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார், மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவருக்கு சிறையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
"போராளிகள் விதைக்கப்படுகிறார்கள், புதைக்கப்படுவதில்லை" - ஸ்டான் சுவாமி மறைவுக்கு கனிமொழி இரங்கல்!
Advertisment