தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்தத ஒன்றியதலைவருக்கானமறைமுகதேர்தல் இன்று நடைபெற்றது.

 Kanimozhi Darna Struggle

Advertisment

தூத்துக்குடி கோவில்பட்டியில் நடைபெற்றஒன்றியதலைவர் தேர்தலில்காலை10 மணிக்கேதிமுக, அதிமுகஉட்பட 19 வார்டுஉறுப்பினர்கள் உள்ளே அமர்ந்திருந்தனர். அதன்பிறகு அறையின் கதவுகள் மூடப்பட்டுமறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.சரியாக11.15 மணிக்குதேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதிமுகவேட்பாளர் 10 வாக்குகள்பெற்றுவெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.திமுக9 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவெற்றியைஏற்றுக்கொள்ள முடியாது எனதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனனையடுத்து களத்திற்கு வந்ததூத்துக்குடி நாடாளுமன்றஉறுப்பினர் கனிமொழி வார்டுஉறுப்பினர்களிடம் விளக்கம் கேட்டறிந்து அதுதொடர்பாகஅதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதற்கான விளக்கத்தைநீங்கள் கூறாமல்போலீசாரை வைத்து வெளியே பலவந்தமாக வெளியேற்றியதின் அவசியம் என்ன என்று கேள்விஎழுப்பி, தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனவேஇந்த வெற்றி செல்லாது எனதர்ணா போராட்டத்தில் கனிமொழி ஈடுபட்டார்.

Advertisment

மேலும் அவர் கூறுகையில், இப்பொழுதுகூட அதிமுவை எதிர்த்துதான்ஓட்டு போட்ருக்கோம்என10 பேர் எங்களுடன்நிற்கிறார்கள். இப்படி இருக்கும்சூழலில் 9 வாக்குகள் மட்டுமேபெற்ற அதிமுகஎப்படி வெற்றி பெற்றதாகஏற்றுக்கொள்ளப்படும்என்றார்.