Advertisment

கந்த சஷ்டி அவமதிப்பு விவகாரம் - இருவருக்கு ஜாமீன்!

jh

Advertisment

‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் சில வாரங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்தபடி தமிழக போலீசாரிடம் அவர் சரணடைந்தார். இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், செந்தில்வாசன் மீது சில தினங்களுக்கு முன்பு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe