காமராஜரின் 118- ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர்மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்துமாறு எந்தச் சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. சுற்றறிக்கை வெளியிடப்படாமலேயே எப்படி நகைக்கடன் நிறுத்தம் பற்றிய தகவல் வெளியானது எனத் தெரியவில்லை" என்றார்.