Skip to main content

காமராஜர் பிறந்த நாள் விழா; தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை நகராட்சி இந்து நடுநிலைப்பள்ளியில் ஜீலை 15 ந்தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவை உள்ளூர் திமுக பிரமுகர்களை வைத்து மரம் நடும் விழாவாக நடத்தியுள்ளார் தலைமை ஆசிரியை பரிமளா.

 

k

 

இதுப்பற்றி ஆளும் அதிமுகவினர் கோபமாகி, கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கூறினர். அந்த புகாரின் அடிப்படையில், நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் விசாரணை நடத்தினார். பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதால், கல்வித்துறை சார்பில் வாணியம்பாடி டிஎஸ்பி முரளியிடம் புகார் கொடுத்துள்ளார்.

k

இந்த புகாரை தொடர்ந்து, முதல் கட்டமாக துறை ரீதியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ்  உத்தரவின் பேரில்  தலைமை ஆசிரியை பரிமளாவை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்