பெருந்தலைவர் காமராஜருக்கு இன்று (15/07/2022) 120- வது பிறந்தநாள். அவர் பிறந்த ஊரான விருதுநகரில், அதுவும் அவர் படித்த கே.வி.எஸ்.பள்ளியில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள் 4,656 மாணவர்கள்.

Advertisment

‘தேசியத் தலைவர் கே.காமராஜ் உடையணிந்த அதிக பட்ச மாணவர்கள்’ என இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் அதனைப் பதிவு செய்து சான்றளித்துள்ளது. தேசியத் தலைவரான காமராஜரை நினைவுகூர்ந்து, அவரது பிறந்தநாளில் அவர்போல் வேட்டி சட்டை உடுத்தி, காமராஜர் முகமூடி அணிந்து சாதனை நிகழ்த்திய, அப்பள்ளியின் 4656 மாணவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.