Skip to main content

இளைஞரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற கமல்:கூட்டத்தில் சலசலப்பு

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 

இப்போதுள்ள ஆட்சி தொடர்ந்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.


சேலம் மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பிரபு மணிகண்டன், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9, 2019) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியது:

 

k


தமிழகத்தில் பரவலாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அத்தியாவசிய தேவையான குடிநீருக்காகக்கூட மக்கள் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது. ஏரிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றன.

 
வரும் மக்களை தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் வரும். எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு, கடந்த மக்களவை உறுப்பினர் செய்யத்தவறிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்து தருவார். அவ்வாறு இரண்டு ஆண்டுகளில் அவர் தன் கடமைகளைச் செய்யத்தவறினால் அவருடைய ராஜினாமா கடிதத்தை பெற்று உங்களிடம் கொடுப்போம். 


இப்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து ஆட்சி செய்ய அனுமதித்தால் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஒன்றும் பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுவார்கள். எனவே, மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை படித்துப்பார்த்து அனைவரும் வாக்களியுங்கள். எந்தெந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்பதையே நாங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக தந்திருக்கிறோம். எனவே, இளைஞர்கள் அதை புரிந்து கொண்டு வரும் ஏப்ரல் 18 அன்று வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 18ம் தேதி, தமிழகத்தை மாற்றுவதற்கான முதல்படி. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

 

பரப்புரை முடிந்து நடிகர் கமல்ஹாசன் கிளம்பிச்செல்கையில், கூடியிருந்த கூட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர், கமல் சார்... கமல் சார்... என அழைத்தார். தன்னைத் திரும்பிப் பார்க்கும்படியும் ஒலிபெருக்கியில் கூறினார். மேலும் அவர், இதேபோல இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிப்பீர்களா? கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா? என்றும் கேட்டார். இதையடுத்து சுற்றும்முற்றும் திரும்பி பார்த்த கமல்ஹாசன், இளைஞரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமலேயே அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் கூட்டத்தினரிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கேள்வி கேட்ட நபருக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.