Skip to main content

கமல்ஹாசனை நோக்கி முட்டை,கல்வீச்சு! அடித்து, உதைத்த ம.நீ.மய்யத்தினர்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

 

தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிய கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கற்களை வீசியவர்களை ம.நீ.மய்யத்தினர் அடித்து, உதைத்தனர்.  

 

k

 

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் பேசியது  நாடெங்கிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  டெல்லி நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  கமல்ஹாசனுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று, கரூர் வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.  பொதுக்கூட்ட மேடையை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு கமல்ஹாசன் கிழே இறங்கியபோது,  அவரை நோக்கி முட்டை மற்றும் கல்கறை 2 பேர் வீசினர்.   இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நீதி மய்யத்தினர் அந்த இருவரையும் அடித்து,உதைத்தனர்.   போலீசார் அந்த 2 பேரையும் மீட்டபோது, கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில், கல்வீசிய ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.   அவர் தளவாபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது.


கல்வீசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட எஸ்.பி.  விக்ரமன் ஆர்ப்பாட்டத்தை கைவிடும்படி மைக்கில் பேசினார்.   சினேகன் உள்ளிட்ட ம.நீ.ம. நிர்வாகிகள் சிலர், கல்வீசி தாக்கியவரை தப்பிக்கவிட்டதாக விக்ரமனிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், கல்வீசிய நபர்களிடம் விசாரணை  நடத்தி வருவதாகவும், கல்வீசி கடும் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர்  என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   

 

 சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து என கமல்ஹாசன் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இதனால் கமல்ஹாசன் வீட்டை சில அமைப்பினர் முற்றுகையிடலாம் என்று தகவல் வந்துள்ளது.  இதையடுத்து அவர் வீட்டிற்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

k

 

Next Story

’நான்  Bடீம் அல்ல; நான் A டீம்’- நெல்லையில் கமல் பேச்சு

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

மக்கள் நீதி மய்யத்தின் 2ம் ஆண்டு துவக்கவிழா இன்று நெல்லையில் நடைபெற்றது.  கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  இந்த விழாவில் பங்கேற்க காலை 10 மணிக்கே நெல்லை வந்தடைந்தார்.   பின்னர் சவலாப்பேரியில் உள்ள மறைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.   பின்னர் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி கிருஷ்ணவேணியிடம் ஆறுதல் கூறினார். 

 

n

 

மாலை 6 மணியளவில் துவங்கப்பட்ட  விழாவிற்கு தமிழகம் எங்கிலும் இருந்து அதன் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்திருந்தனர்.   விழாவில் பேசிய கமல்ஹாசன்,  ’’காந்தி, நான்  எல்லோருக்கும் தெரியவேண்டும் என்றார். அதனால்தான் அவர் ரூபாய் நோட்டின் மூலமாக எல்லோருக்கும் தெரிகிறார்.   அதனால்தான் அவரை நான்  தேர்ந்தெடுத்தேன்.   அஹிம்சை என்பது பெரிய வீரம்.  அதற்கு துணிச்சல் வேண்டும். 

 

n

 

 பல விற்பன்னர்கள் பல துறைகளில் மறைந்து கிடக்கிறார்கள்.   அவர்களை நசுக்கும் ஆட்சியாளர்களை இறக்க வேண்டும்.   தமிழகத்தை மாற்ற வேண்டும்.   அது மாறும்.   அது  திமிர் அல்ல; தன்னம்பிக்கை.   புதிய தமிழகம் உருவாக வேண்டும்.  உண்மையான மக்களாட்சி என்பதை இந்த தலைமுறையினர் தெரிந்துகொள்ளட்டும்.    சுப்பிரமணியன் மாதிரி உயிர்தியாகம் செய்பவர்களை அனுப்ப வேண்டும்.   அதுதான் பெருமை.   மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அரசுகள் மறந்துவிட்டன.    உங்களுக்கு நான் முக்கியமாக காட்டுவது என் உள்ளத்தை. என் நேர்மையை.   அதனால்தான் சரியாக வரி கட்டவேண்டும் என்று முடிவெடுத்தேன்.    சாகும்போது சொத்து கூட வராது.   சொத்து என்பது அடிமட்ட தொண்டன்தான்.

 

n

 

அடிப்பது கொள்ளை என்பது உங்களுக்கு தெரியாதா? என்று   தொண்டர்களை பார்த்து விரல் நீட்டினார்.  அப்போது,  கரகோஷம் எழுந்தது.  சிறிய இடைவேளைக்கு பின்னர் பேச்சை தொடர்ந்தவர்,  கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள்.   தமிழகத்தை அடக்க ராணுவத்தை  அனுப்புகிறேன் என்கிறது அரசு.   ராணுவத்தை அனுப்பினால் என் தம்பி சுப்பிரமணியன்தான் வருவார்.  

 

n

 

குரங்கு ஆட்டம் போட்ட மாதிரி எங்களை குட்டுவைக்க முடியாது.  மக்களின் நலமே மய்யத்தின் கொள்கை.  சமத்துவம் காப்போம். அரசு இயந்திரங்களின் குறைகளை அகற்ற வேண்டும்.  நம் நிலம் காப்போம்.   பயந்தவனுக்கு ஒளியெல்லாம் நெருப்பாய் தெரியும். அது சுடும். என்னைப்பார்த்து பிஜேபியின் B டீம் என்கிறார்கள்.  நான் யாருக்கும் B டீம் அல்ல.  நான் A டீம்.  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். நீங்கள் வல்லவர்கள் . நிரூபிக்க வேண்டும் என்றவர், இந்த பாராளுமன்ற தேர்தல் நமக்கு முக்கியம் என்றார்.

 

nn