Skip to main content

ரஜினி - கமல்... அரசியலுக்கு முன் சினிமா கூட்டணியா?

Published on 04/12/2019 | Edited on 04/12/2019
r

 

தர்பார் படம் முடிந்து பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதற்கடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.   சிறுத்தை சிவா டைரக்‌ஷனில் நடிக்கும் படத்திற்கும் பிறகும் சினிமாவில் நடிப்பேன் என ஏற்கனவே பேட்டியில் சொல்லியிருந்தார் ரஜினி. அது இப்போது உறுதியாகியிருக்கிறது.

 

l

 

கார்த்தியை வைத்து கைதி மெகா ஹிட் கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய்யை வைத்து இயக்கும் படத்தின் ஷீட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவது உறுதியாகிவிட்டது என்று ஒரு செய்தி வெளியானது. இதில் கூடுதல் ஆச்சரியம் தருகிறது இன்னொரு செய்தி. ரஜினி- லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தை தயாரிக்கப்போவது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்பதுதான் அந்த செய்தி. அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத அந்த செய்தி உண்மையாக இருந்தால், அது இரண்டு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

கமல் அரசியலுக்கு வந்தாலும் ராஜ்கமல் நிறுவனத்தை அதன் நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து ஆக்டிவ்வாக நடத்தி வருகிறார் கமல். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் ’கடாரம் கொண்டான்’ படத்தை தயாரித்தது அந்நிறுவனம். ராஜ்கமல் பிலிம்ஸுக்கு 50வது படம் வருவதால் அப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.