Skip to main content

ஆணவத்தின் உச்சத்தில் உள்ளார் கமல்- அமைச்சர் ஜெயக்குமார்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018

இளங்கோவடிகள் திருநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில உள்ள இளங்கோவடிகள் சிலை மற்றும் அவரது திருஉருவ படத்திற்கு மரியாதையை செய்ததை அடுத்து அமைச்சர் ஜெயக்குமார் பெரம்பூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கலந்துகொண்டார் அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்

 

கமலஹாசனால் அவரை சுற்றி உள்ளவர்களுக்குத்தான் ஆபத்து, ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார் கமல். வாயிற்கு வந்தபடி பேசிவருகிறார். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றபடி அவர் பேசிவருகிறார்.

 

jayakumar

 

தமிழநாட்டிற்கு ஆபத்து என கூறும் கமல், என்ன ஆபத்து என்று கூற முடியுமா என கேள்வி எழுப்பிய அமைச்சர், 

ஆபத்து தமிழகத்திற்கு அல்ல கமலை சுற்றி உள்ளவர்களுக்குத்தான் அது யார்யார் என்று அனைவருக்கும் தெரியும் இந்த ஆபத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழகத்திற்கே ஆபத்து என அவர் கூறிவருகிறார் என கூறினார்.

சார்ந்த செய்திகள்