இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமானகமல்ஹாசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (02.03.2021) கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமல்ஹாசன்!
Advertisment