kl

மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் தயாரிப்பு பணிகளுக்காக 6.90 கோடி ரூபாயும், படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.

Advertisment

ஆனால் மர்மயோகி படத்தை தயாரிக்காமல் "உன்னைபோல் ஒருவன்" படத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதில் 6.90 கோடியை கேட்டு சாய்மீரா நிறுவனத்தால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை ஆகஸ்ட் 10அம் தேதி வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தை தயாரிக்க பலரிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், மர்மயோகி படத்திற்கு கொடுத்த சம்பளம் 4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடியை கொடுக்காமல் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என பிரமிட் சாய்மீரா நிறுவனம் சென்னை ச புதிய வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.