Skip to main content

மிஸ்டர் சிஎம் இந்த கேள்வி உங்களுக்குத்தான்- பொள்ளாச்சி பாலியல் கொடூரம்;கமல் ஆவேசம்!!

Published on 14/03/2019 | Edited on 15/03/2019

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், இந்த சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

 

அந்தப் பொண்ணு அலறும் குரல் கேட்டதிலிருந்து மனசு பதறுது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா. அந்த பெண்ணுடைய குரலில் இருந்த ஒரு அதிர்ச்சி, பயம் நண்பன் என்று கூட்டிவந்தவன் தன்னை காப்பாற்றி கூட்டிட்டு போயிற மாட்டானா என்கிற தவிப்பு கண்ண மூடும் ஒவ்வொரு நொடியும் திரும்பத் திரும்ப காதில் கேட்கிறது. 

 

நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து ஊர் உலகமே ஒன்று திரண்டபோது  அன்றைய தமிழக முதல்வர் ஒரு அறிக்கை விடுறாங்க, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடூர குற்றங்களாக கருதப்பட்டு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று. அந்தப் பெண்மணியின் பெயரை வைத்து ஆட்சி செய்கின்ற இந்த அரசாங்கம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக, மெத்தனமாக இருக்க முடிகிறது.

 

 

KAMAL

 

பெண்ணை பெற்ற எல்லோருக்கும் பதறுது  உங்களுக்கு பதறலயா.  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சொல்வதில் இருக்கும் மும்பரம்  குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை தமிழக அரசாங்கம் உறுதி செய்யும் என பொதுமக்களிடம் எடுத்துச் செல்வதில் இல்லையே ஏன்?

 

வழக்கை விசாரிக்கும் எஸ்பி பத்திரிக்கையாளர் சந்திப்பில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை தவறுதலாக சொல்லிட்டாராம். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலுக்கு எதிராக அவர் செயல்பட்டாலும் அரசாங்கம் அமைதியாகவே இருக்கிறது ஏன்?.  அடுத்த இரண்டு நாளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ வெளியே வருகிறது எப்படி?  குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுவிட்டதாக சொல்லும்போது இந்த வீடியோ எப்படி வெளியே வந்தது. அந்த பாதிக்கப்பட்ட வீடியோ. அது எப்படி வெளியே வந்துவிட்டது என்ன காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறேன் என்று சொன்ன தலைமையே போட்டோவை சட்டை பாக்கெட்டில் வைத்து இருக்கு நீங்க பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த அநியாயத்திற்கு ஆக என்ன பண்ணி இருக்கீங்க.

 

நான் சொல்லட்டுமா தன்னுடைய எதிர்ப்பை பதிவு பண்ண வந்த மாணவர்களை பலவந்தமாக அப்புறபடுத்தியுள்ளீர்கள். பெண்களை  பயமுறுத்த முயற்சி பண்ணி இருக்கீங்க. நேர்மையான வழியில் நியாயமான கோபத்தை பதிவு பண்ண வந்த பெண்களை முறைதவறி நடந்து கொண்ட இந்த காவல்துறையா எங்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறது என்று எங்கள் பெண்கள் கேட்பது உங்களுக்கு கேட்கலையா மிஸ்டர் சிஎம் 

 

போராட்டம் நடத்த வரும் பெண்களை போலீசை விட்டு அடிக்கிறீர்கள். ஆனால் உங்களின் ஆட்சி ஒரு பெண்ணின் பெயரால் நடக்கும் ஆட்சி என்று நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாதுக்கும் ஒரு எல்லை இருக்கு. மக்கள் நீதி மையத்தின் தலைவராக கேட்கவில்லை இரு பெண்களுடைய அப்பாவாக கேட்கிறேன்.  இந்த பாவத்திற்கு என்ன பரிகாரம் பண்ண போறீங்க. எங்கள் பெண்களும் புகார் கொடுக்க கூடாது என்று வீடியோ வெளியேற்றுகிற சகோதரிகளுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்.

 

கட்சி பாகுபாடுகள் எல்லாத்தையும் தாண்டி இந்த கொடூரமான காரியத்தை செஞ்சவங்க மேலே இந்த அரசாங்கம் எடுக்க போகின்ற நடவடிக்கை என்ன?.  நீங்க கொடுக்கிற தண்டனை பெண்களுக்கு எதிராக கொடுமையை எவனாவது செய்தால் அரசாங்கம் விடாது என்கின்ற நம்பிக்கையை தரவேண்டும். 

 

இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள். நம்ம நாட்டுல இருபெரும் காவியங்களாக கருதப்படும் மகாபாரதமும், இராமாயணமும் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்கான போர்களை பற்றியது. தன் மனைவிக்கு ஏற்பட்ட  துயரை துடைக்க புறப்படுகின்ற கடவுளர்கள் வாழ்ந்த நாட்டில் உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போகிறீர்கள் சாமி.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.