Skip to main content

கண்டித்த கணவர் கொலை... காதலனுடன் மனைவி கைது...

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
Kalrayan Hills

                                                           தேவராஜ்             புஷ்பா             மணி 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் வெள்ளிமலை சேராப்பட்டு செல்லும் சாலையில், இந்நாடு அருகே மேல்நிலவூர் வனபகுதியில் கடந்த 7ந்தேதி அழுகிய நிலையில் ஆண் பிரேதம் கிடந்துள்ளது. மேலும் கைகள் கட்டப்பட்டு கவிழ்ந்து கிடந்தது. கவிழ்ந்து கிடந்த உடலில் மேல் வரிசையாக கற்கள் அடுக்கப்பட்டு இருந்தது.

 

இதை பார்த்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜகோபால் சடலத்தை பார்வையிட்டு கரியாலூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தார். 

 

இதையடுத்து கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் ராஜா, சிவலிங்கம் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். மேலும் சடலம் கிடந்த இடம் தருமபுரி மாவட்ட எல்லை என்று கூறி அலைகழித்துள்ளனர்.

 

நீண்ட இழுபறிக்கு பின்னர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் புகாரின்பேரில் கரியாலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் எஸ்பி சங்கர் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், ஏழுமலை, மனோகர், முருகன், தங்கதுரை உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். 

 

இந்நிலையில் கரியாலூர் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீழாத்துகுழியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2ந் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில்  தனது கள்ளக்காதலன் மணி மற்றும் அவரின் உறவினர் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து, குடிபோதையில் படுத்திருந்த கணவர் தேவராஜ்(30) என்பவரை வாயில் துணை வைத்து அடைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். 

 

இதையடுத்து போலிசார் மனைவி புஷ்பா(26) சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, கீரகடை பகுதியை சேர்ந்த  சேர்ந்த கள்ளக்காதலன் மணி(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷை கரியாலூர் போலிசார் தேடி வருகின்றனர். 

 

மனைவி புஷ்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “நானும் எனது கணவர் தேவராஜ் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மைசூர் சென்றோம். அங்கு வேலைக்கு சென்றபோது சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணி என்ற வாலிபர் பழக்கமானார். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த என் கணவர் என்னை கண்டித்தார்.

 

இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டிற்கு வந்தோம். இங்கும் எனது கணவர் டிரைவர் வேலைக்கு சென்று விடுவதால் நானும், மணியும் கள்ளக்காதலை தொடர்ந்தோம். இது தெரிந்த கணவர் குடித்து விட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால் எனது கணவரை கள்ளக்காதலன் மணியுடன் சேர்ந்து தீர்த்துகட்ட திட்டம் தீட்டினோம்.

 

அதன்படி கடந்த 2ந்தேதி மாலை 7.30 மணியளவில் என் வீட்டிற்கு வந்த மணி, அவரது உறவினர் சுரேஷ், நானும் சேர்ந்து கொலை செய்தோம். பின்னர் யாருக்கும் தெரியாமல் இருக்க என் கணவரின் சடலத்தை மணி, சுரேஷ் ஆகிய இருவரும் பைக்கில் எடுத்து சென்று மேல்நிலவுரை அடுத்த வனபகுதியில் போட்டு விட்டு ஊருக்கு சென்று விட்டனர். பின்னர் போலிசாரின் தீவிர விசாரணையில் மாட்டிக்கொண்டோம்” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.