Skip to main content

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31 கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா  பாதிப்பா? 

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
ப்

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.  அசகளத்தூரை சேர்ந்த 11 பேரும்  கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்த நிலையில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மலைக்கோட்டாலம் மேலூர் ஈயனூர் ஆகிய அரசு சுகாதார நிலையம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  காரணம் மேற்படி சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனையிலும் மலைக்கோட்டாலம் நீலமங்கலம், வாணவரெட்டி, வீரசோழபுரம், மேலூர் தண்டலை, சிறுவத்தூர், அசகளத்தூர் இருந்தை, மாரனோடை, மதியனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்கள் மேற்படி அரசு மருத்துவமனையிலும் சுகாதார நிலையங்களிலும் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர்.  அவர்களை அறிந்து கர்ப்பிணி பெண்களுக்கு  நோய் தொற்று  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இப்போது  30 கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா நோய் பரவியிருப்பதாக அதிகாரிகளுக்கு நோய் பரிசோதனை அறிக்கை வந்திருப்பதாக தகவல் வெளியானதையொட்டி, சுகாதார நிலையங்கள் மருத்துவமனை அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டன.  மேலும் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள நிறைமதி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவரும் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 31 கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. 

இவ்வளவு நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி அதிகாரிகள் தரப்பில் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பாதிப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதோடு ஆட்சியர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஆய்வுசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.  இதுபற்றி அரசு மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் ஒரு செவிலியருக்கு கரோனாநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த செவிலியர் மூலம் அங்கு சிகிச்சைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு நோய் பரவி இருக்கலாம் அல்லது அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டர் மூலம் இந்த நோய் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது அல்லது முண்டியம்பாக்கம் மருத்துவ ஆய்வகத்தில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு.  ஏற்கனவே  டெல்லியை சேர்ந்த நிதின்சர்மா என்பவருக்கு  நோய் பாதிப்பு இல்லை  என்று  மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, பிறகு அவருக்கு நோய் இருப்பதாக கூறி  அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு போலீஸ் துணை தேவைப்பட்டது.  எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகளில் ஏதாவது தவறு நடக்க வாய்ப்பு உண்டு.  எனவேதான் இது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.  மேற்படி நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு வெளித் தொடர்பு இல்லாத நிலையில் நிறைய பெண்களுக்கு நோய் தொற்று பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்ற விவரங்கள் மர்மமாக உள்ளன.

பொது மக்கள் மத்தியில் இது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் நோய் தொற்று சிகிச்சையில் இருந்து வந்தனர். நேற்று மட்டும் 79 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அமைதியான மாவட்டம் அதிக பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்துவந்த கள்ளக்குறிச்சி இப்போது 100-ஐ கடந்துள்ளதை கண்டு மாவட்ட மக்கள் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தமிழக மக்கள் மத்திய மாநில அரசுகளின் 144 தடை உத்தரவுகளை பெரும்பாலும் கடைபிடித்து வருகிறார்கள்.  தமிழகத்தில் தினசரி 30 முதல் 50 பேர் வரை மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்து வந்தனர். பிறகு தினசரி 100, 200 என உயர்ந்தது. இப்போது தினசரி 500 கடந்து போய்க்கொண்டிருக்கிறது நோய் பரவல் எண்ணிக்கை. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில்  வேலை செய்தவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதன் மூலம் நோய் தீவிரமாக பரவி வருகிறது .  

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

சாமி சிலைகள் சேதம்; பொதுமக்கள் போராட்டம்       

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

கள்ளக்குறிச்சி  மாவட்டம் சின்னசேலம் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள், கோவில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் பூசப்பாடி கிராமத்தின் எல்லையில் கன்னிமார் கோயில் உள்ளது. இந்தக் கோவில் சாமிகளை சேலம் மாவட்டம் ஊனத்தூர் மற்றும் அப்பகுதியில் உள்ள பல கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இரு வேறு சமூகத்தினருக்கு கோயிலில் வழிபாடு நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த 10 வருடமாக பூசை நடத்தப்படவில்லை. இதனால் ஒரு தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தனர் கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார்கள். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இணைந்து வழிபாடு நடத்திய மக்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்நிலையில் எட்டாவது நாளான நேற்று ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அதிர்ச்சி அடைந்தனர். 

 

swami idols were vandalised in Kallakurichi, public struggle

 

காரணம் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலர் கோவிலை சுற்றியுள்ள மரங்களை வெட்டியதாக கூறுகின்றனர். அப்போது கோவிலில் உள்ளே இருந்த சிலைகள் உடைந்தும் காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் கோவிலின் அருகே அமர்ந்து மரத்தை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதன்பின்பு இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கோவிலில் வழிபாடு நடத்தும் மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு‌ இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். 

 

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதற்கு ஒரு தீர்வு காணாமல் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என்று அமர்ந்திருந்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்புவதாக கூறியதையடுத்து கோவில் முன்பு பொதுமக்கள் காத்திருந்தனர். சின்னசேலம் போலீசார் கோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார். மரங்களை வெட்டி சிலைகளை சேதப்படுத்தியவர்களைக் கண்டறிந்து, காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார். கோவில் வளாகத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், சின்ன சேலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராமன் கச்சிராயபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் சின்ன சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது