Skip to main content

மகளிர் குழுக்களிடம் பணம் கையாடல்; இருவர் கைது

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

kallakurichi sankarapuram microfinance collection amount incident 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மதுரா மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை எளிய மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இந்த நிறுவனம் குறைந்த வட்டியில் வாரக்கடன் மற்றும் மாதக்கடன் கொடுத்து அதை வசூலித்து வருகிறது.

 

இந்நிறுவனத்தில் துணை மேலாளராக சங்கராபுரம் அருகே உள்ள மரூர் கிராமத்தைச் சார்ந்த கண்ணுசாமி மகன் ஐயப்பனும், மக்கள் தொடர்பு பணியாளர்களாக தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த  குழந்தைவேல் மகன் தினேஷ் மற்றும் மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அய்யப்பன் ஆகியோரும் பணியாற்றி வந்துள்ளனர். மகளிர் சுயஉதவிக் குழு பெண்களிடம் அந்நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகையை கிராமங்களுக்கு சென்று வசூல் செய்து அந்தப் பணத்தை அந்த நிறுவனத்தில் செலுத்தி வந்தனர்.

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுமார் 40க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை நிறுவனத்தில் செலுத்தாமல் பணத்தை கையாடல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக சங்கராபுரம் காவல்நிலையத்தில் நிறுவனத்தின் கிளை மேலாளர் அய்யனார் கொடுத்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

மதுரா மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியோடு இந்தியாவில் ஏழு மாநிலங்களில் 15 ஆண்டுகளாக இயங்கி வருவதாகவும், மேற்படி நிறுவனம் மகளிரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் குடும்ப வருமானத்தைப் பெருக்கவும், பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடனாக நிதி அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

மகளிர் குழுக்கள் திரும்ப செலுத்தும் நிதியை வாரத்திற்கு ஒருமுறை, இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, மாதம் ஒரு முறை என்று பணியாளர்கள் மூலம் வசூலித்து வந்ததாகவும், சில மாதங்களாக உறுப்பினர்களிடமிருந்து மகளிர் குழுவிலுள்ள பெண்கள் கட்டிய பணத்தை நிர்வாகத்திடம் செலுத்தாமல் நிலுவை காட்டுவதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து புகார் வந்ததையடுத்து அந்த நிறுவனம் தணிக்கை குழுவை வைத்து தணிக்கை செய்த போது நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூவரும் நிறுவனத்தில் செலுத்த வேண்டிய சுமார் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கராபுரம் காவல்துறையினர் இந்த புகாரை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஐயப்பன், தினேஷ், அய்யப்பன் ஆகிய மூன்று நபர்களும் 17 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தது உறுதியானது.

 

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று குற்றவாளிகளையும் தேடி வந்த நிலையில், இன்று சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அந்நிறுவனத்தின் உதவி மேலாளர் மரூர் ஐயப்பனையும், சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேவபாண்டலம் தினேஷையும் கைது செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூக்கனூர் ஐயப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.