Skip to main content

கல்வராயன் மலையில் பெருகிவரும் கள்ளச்சாராயம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. இங்கு சுமார் 27 ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் பிழைப்பு தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வார்கள். மலையில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்த மலையில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் மரம் வெட்டும் வேலைக்கு என்று அழைத்துச் சென்று ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள். இதனால் அந்த அப்பாவி மக்கள் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.   

 

Kallakurichi - Kalrayan Hills - illict liquor

 

 

இந்த மலையில் அதிக வெளியாட்கள் தொடர்பு இல்லாததால் பல ஆண்டுகளாகவே இம்மலையில் கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையினர் மலையில் சோதனை செய்து இதை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியும் புதிதுபுதிதாக சாராயம் காய்ச்சும் தொழில் நடந்தபடியே உள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தொர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 15ஆம் தேதி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரனுக்கு மலையில் கள்ளச்சாராய தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அதிரடிப்படையினர் தனிப்படை எஸ்ஐ வினோத்குமார், கச்சிராபளையம் தனிப்பிரிவு எஸ் ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஒரு அணியாக மலைக்குச் சென்றனர். கருப்பனார் கோயில் ஆற்றின் ஓரத்தில் 20 பாரல்களில் சாராய ஊறல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பார்லர்களில் இருந்த சாராய ஊறலை எஸ்பி ஜெயச்சந்திரன் கீழே கொட்டி அழித்தார். பின்னர் அவைகளை போலீசார் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.

இதேபோல் சின்னசேலம் கூகையூர் ரயில்வே கேட் அருகில் அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக டூவீலரில் வேகமாக வந்த ஒரு நபரை வழிமறித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து 55 லிட்டர் கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாவலூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி சாராயம் கடத்தியதாக அவரை கைது செய்தார். கல்வராயன்மலையில்சாராய ஊறல் வைத்திருந்ததாக உதயகுமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் புதிதுபுதிதாக கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து மலையில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அனுப்பப்படுகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வரும் இந்த நேரத்தில் முற்றிலும் சாராயத்தை அழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு கள்ள சாராயம் காய்ச்சி விற்றதாக நாலு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற கள்ளச்சாராயத்தை முற்றிலும் கட்டுப்படுத்த அந்தத் தொழிலை கை விட்டு சுயதொழில் செய்து பிழைக்க முன் வருபவர்களுக்கு அரசு கடனுதவி வழங்கப்படும். அந்த கடனுதவி பெற காவல்துறை பரிந்துரை செய்யும். அதனால் இனி வரும் காலத்தில் சாராய தொழிலை விட்டு திருந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் எஸ்பி ஜெயச்சந்திரன். கல்வராயன் மலையும் கள்ளச்சாராயமும் பிரிக்க முடியாது தொழிலாக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்படுமா? தடுக்கப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


                          

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.