Skip to main content

கல்வராயன் மலையில் பெருகிவரும் கள்ளச்சாராயம்!

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது கல்வராயன் மலை. இங்கு சுமார் 27 ஏழு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்கள் பிழைப்பு தேடி பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வார்கள். மலையில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்த மலையில் போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் மரம் வெட்டும் வேலைக்கு என்று அழைத்துச் சென்று ஆந்திராவில் செம்மர கடத்தலில் ஈடுபட வைக்கிறார்கள் கடத்தல்காரர்கள். இதனால் அந்த அப்பாவி மக்கள் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.   

 

Kallakurichi - Kalrayan Hills - illict liquor

 

 

இந்த மலையில் அதிக வெளியாட்கள் தொடர்பு இல்லாததால் பல ஆண்டுகளாகவே இம்மலையில் கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. காவல்துறையினர் மலையில் சோதனை செய்து இதை தடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியும் புதிதுபுதிதாக சாராயம் காய்ச்சும் தொழில் நடந்தபடியே உள்ளன. இந்த தொழிலில் ஈடுபட்ட பல்வேறு நபர்களை காவல்துறை குண்டர் சட்டத்தில் கைது செய்வது தொர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் அமோகமாக நடந்து வருகிறது.

கடந்த 15ஆம் தேதி மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரனுக்கு மலையில் கள்ளச்சாராய தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து எஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அதிரடிப்படையினர் தனிப்படை எஸ்ஐ வினோத்குமார், கச்சிராபளையம் தனிப்பிரிவு எஸ் ஐ ராஜேந்திரன் ஆகியோர் ஒரு அணியாக மலைக்குச் சென்றனர். கருப்பனார் கோயில் ஆற்றின் ஓரத்தில் 20 பாரல்களில் சாராய ஊறல்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த பார்லர்களில் இருந்த சாராய ஊறலை எஸ்பி ஜெயச்சந்திரன் கீழே கொட்டி அழித்தார். பின்னர் அவைகளை போலீசார் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.

இதேபோல் சின்னசேலம் கூகையூர் ரயில்வே கேட் அருகில் அதிகாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக டூவீலரில் வேகமாக வந்த ஒரு நபரை வழிமறித்து சோதனை செய்தனர். அவரிடமிருந்து 55 லிட்டர் கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாவலூர் மேட்டு தெருவைச் சேர்ந்த கணேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி சாராயம் கடத்தியதாக அவரை கைது செய்தார். கல்வராயன்மலையில்சாராய ஊறல் வைத்திருந்ததாக உதயகுமார் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போதிலும் புதிதுபுதிதாக கள்ளச்சாராய உற்பத்தி தொடர்ந்து மலையில் நடைபெற்று வருகிறது. அங்கிருந்து சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் காய்ச்சி அனுப்பப்படுகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வரும் இந்த நேரத்தில் முற்றிலும் சாராயத்தை அழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

மேலும் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு கள்ள சாராயம் காய்ச்சி விற்றதாக நாலு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே இதுபோன்ற கள்ளச்சாராயத்தை முற்றிலும் கட்டுப்படுத்த அந்தத் தொழிலை கை விட்டு சுயதொழில் செய்து பிழைக்க முன் வருபவர்களுக்கு அரசு கடனுதவி வழங்கப்படும். அந்த கடனுதவி பெற காவல்துறை பரிந்துரை செய்யும். அதனால் இனி வரும் காலத்தில் சாராய தொழிலை விட்டு திருந்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் எஸ்பி ஜெயச்சந்திரன். கல்வராயன் மலையும் கள்ளச்சாராயமும் பிரிக்க முடியாது தொழிலாக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்படுமா? தடுக்கப்படுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


                          

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.