Skip to main content

கள்ளக்குறிச்சி சம்பவம்... பள்ளி நிர்வாகிகளுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Published on 12/08/2022 | Edited on 12/08/2022

 

N

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக போலீசார் சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஐந்து பேரும் காணொளி மூலம் விசாரணைக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் வரும் ஆகஸ்ட் 26 தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்