Skip to main content

வாலிபர் கொலை... மைத்துனர், மனைவியிடம் போலீசார் விசாரணை! உறவினர்கள் அதிர்ச்சி!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020


 

kallakurichi district youth incident police investigation


கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). இவர் புதுச்சேரியில் தங்கி பணி நிமித்தமாக திருபுவனை பகுதிக்குச் சென்று வந்து கொண்டிருந்தபோது திருபுவனை பாளையத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  
 


இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனைவி மற்றும் குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்த நிலையில் காயத்ரிக்கு வேறு ஒருவருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவியிடம் இருந்து பிரிந்த ராஜேஷ்குமார் முதலியார்பேட்டையிலும், திருக்கோவிலூரிலும் மாறி மாறி தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே ராஜேஷ்குமாரின் மைத்துனர் செல்வராஜ் (எ) அமல்ராஜ் ராஜேஷ்குமாரை சமாதானம் செய்து அழைத்து வந்து தனது தங்கையுடன் குடும்பம் நடத்த வைத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் (04/06/2020) மாலை பைக்கில் வெளியே சென்ற ராஜேஷ்குமார் அதன்பிறகு காணவில்லை. இந்த நிலையில் திருபுவனை பாளையத்தை ஒட்டிய மல்லிகை நகர சவுக்குத் தோப்பு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் ராஜேஷ்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
 

 


இதுபற்றி தகவல் அறிந்ததும் ஐ.ஜி சுரேந்திரசிங் யாதவ், எஸ்.பி ராகுல் அகர்வால், எஸ்.பி ரங்கநாதன், திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள் அஜய்குமார், ராஜேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ராஜேஷ்குமாரை அவரது மைத்துனர் செல்வராஜ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.  விசாரணையில் ராஜேஷ்குமார் மனைவியின் குடும்பத்தாருக்கும் ராஜேஷ்குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (04/05/2020) மாலை ராஜேஷ்குமாரும் அவரது மைத்துனர் செல்வராஜூம் சம்பவம் நடந்த பகுதியில் மது அருந்தியுள்ளனர். அதன் பிறகே ராஜேஷ்குமார் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் குடும்பப் பிரச்சினை காரணமாக ராஜேஷ்குமாரை அவரது மைத்துனர் திட்டமிட்டு மது அருந்த வரச் சொல்லி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் ராஜேஷ்குமாரின் மனைவி காயத்ரியையும், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களையும் விசாரித்து வருகின்றனர்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.