பைக்கில் சென்ற போலீஸ்காரர் விபத்தில் உயிரிழப்பு!!!

kallakurichi district Thiyagadurgam

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காமராஜர் நகரைசேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் 39 வயது கோபி,இவர் போலீஸ்காரராக உள்ளார். இவர் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி அலுவலகத்தில் காவலராக தற்போது பணிபுரிந்து வருகிறார். தினசரி தியாகதுருகத்திலிருந்து கள்ளக்குறிச்சியில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று வருவது வழக்கம். எப்போதும்போல 09.45 மணி அளவில் பணி முடித்து இரவு தனது பைக்கில் தியாகதுருகத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டார்.

அப்படி வரும்போது தியாகதுருகம் பைபாஸ் புக்குளம் மேம்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பைக்கில் சென்ற போலீஸ்காரர் கோபி நிலை தடுமாறி அந்த வாகனத்தின் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இறந்தகாவலர் கோபிக்கு காஞ்சனா என்ற மனைவியும்,ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விபத்தில் கோபி இறந்தது குறித்து கேள்விப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bike incident kallakurichi police Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe