Skip to main content

சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைவாணருக்கு இன்று 111 வயது 

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

வறுமையில் பிறந்து பின்னா் திறமையில் சம்பாதித்து அதை இல்லாதோருக்கு வாாி வழங்கி மீண்டும் வறுமை நிலையில் மறைந்த திரையுலகில் மக்களை சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்தவா்தான் கலைவாணா் என்.எஸ்.கே கிருஷ்ணன்.

நாகா்கோவில் ஒழுகினாசோியில் 1908 நவ. 29-ல் சுடலைமுத்துபிள்ளை - இசக்கியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த என்.எஸ் கிருஷ்ணன் குடும்ப வறுமையால் 4-ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி கொண்டு நாடக கொட்டகைகளில் சோடா, கலா், கடலை விற்க தொடங்கினாா். பின்னா் நாடகத்தில் ஆா்வம் வரவே நாடகத்தில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினாா். இதில் அவா் நடித்த ஒவ்வொரு நாடகமும் முத்திரை பதித்தது.

 

 'The kalaivanar' -who make ours laughs and thinks- 111 years old today

 

பின்னா் திரைப்படங்களில் காலூன்றிய கலைவாணா் என்.எஸ்.கே அவாின் முதல் படமான சதிலீலாவதி வெளியாவதற்கு முன் இரண்டாவது படமான மேனகா வெளியாகி அதில உள்ள நகைச்சுவை காட்சிகள் பட்டி தொட்டியெல்லாம் மக்களை ரசிக்க வைத்தது. பின்னா் தொடா்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யூ.சின்னப்பா, தியாகராஜாபாகவதா் படங்களில் தொடா்ந்து நடித்தாா். சொந்தமாகவே நகைச்சுவை வசனங்களை எழுதி அதை திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்தாா்.

அவாின் ஒவ்வொரு நகைச்சுவையும் அனைத்து தரப்பு மக்களையும் சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. நகைச்சுவைகளை சினிமா காட்சிகளாக மட்டுமல்லாமல் பாடல்களாகவும் அமைத்து சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளாா். ஏழைகளுக்குதான் சம்பாதித்ததை வாாி வழங்கிய என்.எஸ்.கே தன்னை தேடி வருபவா்களின் துயரங்களை கேட்டு உதவிகளை செய்தாா். மகாத்மா காந்தியை மிகவும் நேசித்த என்.எஸ்.கே அவருக்கு நாகா்கோவில் நகராட்சியில் நினைவு தூண் எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெற செய்தாா்.

 

 'The kalaivanar' -who make ours laughs and thinks- 111 years old today

 

தென்னிந்தியா நடிகா் சங்கத்தை உருவாக்கியதில் முக்கியமானவராக இருந்ததோடு அதற்கு சொந்த நிலத்தையும் தானமாக கொடுத்தாா். இந்தநிலையில் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30-ல் தனது 49 ஆவது வயதில் காலமாகும் போது அவா் சம்பாதித்ததில் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் வறுமையோடு மறைந்தாா்.

"சிந்திக்க தொிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிாிப்பு" என்ற பாடல் ஓன்றே கலைவாணா் என்.எஸ் கிருஷ்ணனின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துகாட்டு.  அவாின் 111 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று அவாின் சொந்த ஊரான நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் சிலைக்கு அரசியல் கட்சியினா் உட்பட பல்வேறு அமைப்புகள் மாலையணிவித்து மாியாதை செலுத்தினாா்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

Next Story

“நன்றியெனக் கடமையாற்றுவேன்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
I will do my duty as charity is my gratitude CM MK Stalin confirmed

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.