Skip to main content

கலைஞர் கையெழுத்து ... கலெக்டர் உருக்கம்!

Published on 20/06/2021 | Edited on 20/06/2021

 

kalaingar Signature ... Collector Melting!

 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து மாவட்டம் முழுக்க ஆய்வுப் பணியை செய்துவந்தார். இந்நிலையில் குளித்தலை பகுதியிலுளள ஒரு அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது 1959 ஆம் ஆண்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேரடியாக அவர் வந்து ஆய்வு செய்து அந்தப் பள்ளியின் பதிவேட்டில் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதை கண்டுபிடித்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிகவும் நெகிழ்ந்து அந்தப் பதிவை வாட்ஸ்அப் மற்றும் செய்தியாளர்களிடம் இதை பகிர்ந்துள்ளார். 

 

தமிழக வரலாற்றில் நீதிக்கட்சி தொடங்கி அடுத்து திராவிட இயக்கம் என திமுக தேர்தல் பயணத்தை தொடங்கும் போது 1959இல் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்ற நிலையில், ஒரு பள்ளியில் ஆய்வு செய்தபோது எழுதிய குறிப்பு மிகவும் அரிதாக கிடைத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் இந்த பதிவின் மூலமாக தெரிவித்துள்ளார். 

 

kalaingar Signature ... Collector Melting!

 

இது சம்பந்தமாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நாம் கேட்டபோது, "எனக்கு மிகப்பெரிய நல்வாய்ப்பாக இந்த செய்தியை காணமுடிந்தது. அதேசமயம் சமூக நீதிக்காக சமத்துவத்திற்காக தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் பணியாற்றி இந்த சமூகத்தை உயர்த்துவதற்காக அவர்கள் பாடுபட்டதை எண்ணி நான் பெருமையாக கருதுகிறேன். கலைஞர் இந்த தொகுதியில் வெற்றிபெற்று அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை நான் பார்வையிட்டது என் வாழ்நாள் மகிழ்ச்சி. கலைஞர் எப்படி சமூக நீதிக்காக தன்னை அர்ப்பணித்தாரோ அதேபோல் நான் உறுதியாக மக்களுக்காக பணியாற்றுவேன்" என கூறினார். 

 

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் திறமையை அவருக்கு வருகிற கோரிக்கையின் அடிப்படையில் அவரின் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சமூகத்தினுடைய பின்புலம் அதனுடைய வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எல்லாவற்றையும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் கவனித்து ஒரு பாடமாக கொடுத்திருப்பது மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது