திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கலைஞரின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று இரவு 9.20 மணிக்கு மேல் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துமனையில் இருந்து புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
’’திமுக தலைவர் கலைஞர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். கலைஞரின் உடல்நிலை சீராகி வருவதாக நேற்றைய காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று வெளியான அறிக்கையின்படி கலைஞரின் உடல்நிலை சீராக உள்ளது’’ என்று தெரிவித்தார்.