Skip to main content

அனைவரின் விருப்பமும் இதுதான்... முதல்வருக்கு தமிமுன் அன்சாரி கோரிக்கை

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி, மெரினாவில் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரின் விருப்பம், இதனை முதல் அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

kalaignar merina


 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞரின் பேனா நினைவுச் சின்னதிற்கு மத்திய அரசு அனுமதி

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

Central government sanction kalaignar pen memorial

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு  நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. 

 

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமெனவும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. 

 

 

Next Story

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்; ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Kalaignar Pen Memorial; Tamil Nadu Government letter to the Union Government

 

கலைஞருக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ்நாடு பொதுப் பணித்துறை, ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்காறு மண்டலம் அனுமதி வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளது. 

 

இந்நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி தமிழ்நாடு பொதுப் பணித்துறை சார்பில், சென்னை மெரினாவில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.