Skip to main content

கலைஞர் தொடங்கி வைத்த துறை என்பதால் மூடுவிழா எடுக்கும் அரசு ! 

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

 

தமிழக வரவு செலவு கணக்குகளை ஏடுகளில் வைத்து பராமரித்து வந்த நிலையில், அதை பாதுகாக்க நிதித்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 1972 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல் முதலாக கணிணிமயமாகப்பட்ட துறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் உயர்ந்திருந்தது.  தற்போது இத்துறையை மூடும் விழா எடுக்க அரசே வழிவகை செய்கிறது. 

d

 

நிதி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அரசு தகவல் தொகுப்பு விவர மையம் சிறு சேமிப்புத்துறை, கரூவூலக்கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, தலைமை அரசுத்துறை நிறுவனத் தணிக்கைத்துறை, ஓய்வூதிய இயக்கம் என செயல்பட்டு வருகிறது.

 

அரசு தகவல் தொகுப்பு விவர மையம்   24 மணி நேரமும் உழைத்து இலவசமாக குறித்த காலத்தில் தேர்வு முடிவுகளை  அரசுக்கு தந்துவந்தனர். ஆனால் அதை 2017 ஆம் ஆண்டில் இருந்து பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் அரசு தேர்வு துறை இயக்குநரகம் தன் வசம் எடுத்துகொண்டு அதை தற்போது தனியாருக்கு தாரை வார்த்து 250 கோடி நிதியை ஒதிக்கியுள்ளது. இலவசமாக செய்தவர்களிடம் பிடிங்கி தனியாருக்கு  கொடுப்பதின் மூலமாக அரசுக்கு நிதி செலவாகிறது. அதே போல மதிப்பெண் சான்றிதழ்களில் குளறுபடி செய்யும் அபாயமும் உள்ளது. 

 

இதன் முழுமையான நோக்கம் தமிழக அரசு எந்தெந்த துறைகள் நட்டத்தில் இயங்குகிறதோ அந்தத்துறைகளை மூடிவிடலாம் என்ற நோக்கத்தோடு ரிவியூ மீட்டிங் நடைபெற்றது .   இதில் நிதித்துறை அதிகாரிகள் அனைவரும் இருந்துள்ளனர். அப்போது பேசுகையில், ஒருவர் சிறு சேமிப்புத்துறை நட்டத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்று சொல்ல, உடனே அமைச்சர் ஜெயகுமார் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டமாச்சே, அதனால் அதை எடுக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.

 

ஆனால் அரசுக்கு செலவு செய்யாமல் நிதியை பெற்று தந்த இந்த துறையை கலைஞர் தொடங்கியது என்ற ஒரே காரணத்தாலேயே அங்கு நடந்த அத்துனைப்பணிகளையும் தற்போது தனியாருக்கு  வார்த்துவிட்டு இங்கு எந்த வேளையும் இல்லையே இது எதற்கு செயல்படுகிறது  என்பது போல பிம்பத்தை உருவாக்கி இதை தனியாருக்கு விற்பனை செய்யப் போகிறார்கள். 

 

இதை வாங்கும் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 30 வருடங்களாக மூன்று ஏக்கர் நிலத்தை அரசு ஒரு வருடத்திற்கு வெறும் 3000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் இந்த நிறுவனமோ ஒரு மாணவரிடம் ஒரு வருடத்திற்கு 31/2 லட்சம் ரூபாயாக கட்டணம் செலுத்துகின்றனர். இதில் பணிபுரியும் நிர்வாகிகளுக்கு குறைந்தபட்சமாகவே ஒரு லட்சம் வீதம் கொடுக்கப்படுகிறது.  

 

தற்போது இந்த நிறுவனத்தின் இயக்குனராக இருப்பவர் கிருஜா வைதியநாதன் அப்பா என்பதால் தற்போது அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூடும் நிலையில் அந்த இடத்தையும் தன்வசம் கொண்டுவர கிரிஜா வைத்தியநாதன் மூலமாக தற்போது காய் நகர்த்தியுள்ளாராம்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் உதவி பண்ணலைன்னா, அந்தப் படம் பிணவறைக்கு தான் போயிருக்கும்” - வடிவேலு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
vadivelu about kalaignar

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் கடந்த 26ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு வரும் 6ஆம் தேதி முதல் இலவசமாக அனுமதிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் வடிவேலு கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார். பின்பு திமுக சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய வடிவேலு, “கலைஞர் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி இல்லை. சன்னதி. தி.மு.க தொண்டன் ஒவ்வொருத்தருக்கும் அது குல தெய்வக் கோயில். மணிமகுடம் கலந்த மணிமண்டபம். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். ஆனால், கலைஞருடைய தீவிர பக்தன். தீவிர விஸ்வாசி. 

கலைஞருடன் இருக்கும் போது, எம்.ஜி.ஆரை வெளியில் இருந்து தான் பார்த்திருக்கேன். இருவரும் நண்பர்கள் தான்.  ஆனால் கலைஞரின் கதை வசனத்தில் நடிச்சிருக்கேன். இவர் கூட பேசியிருக்கேன், பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் அவர் எனக்கு தைரியம் சொல்வார். கலையுலகத்தை அவர் எந்தளவிற்கு நேசிச்சார் என எல்லா மக்களுக்கு தெரியும்.  

ஒரு முறை 23ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ணமுடியல. அவருக்கு ஃபோன் போட்டு சொன்னே. என்ன பிரச்சனைன்னு கேட்டார். ராஜா குதிரைக்கு மேல் போகக்கூடாதாம், ப்ளு கிராஸ்லாம் பஞ்சாயத்தாம் என்றேன். அதற்கு அவர் ராஜா குதிரையில போகாம குவாலிஸ்-லையா போவார். அப்புறம் ஆ.ராசாவிடம் சொல்லி பார்க்க சொன்னார். அதே போல உன் எம்.ஜி.ஆர் நடிச்ச காஞ்சி தலைவன் படத்துல ஒரு பஞ்சாயத்து நடந்துச்சு,  அப்ப அத சரி பண்ண முடியல. அதுக்கப்புறம் இந்த மேட்டர் என்றார். கண்டிப்பா இந்த படம் ரிலீஸாகிடும் என்று தைரியம் கொடுத்தார். அப்புறம் ரிலீஸ் பண்ண வைச்சதும் கலைஞர் தான். அவர் பண்ணலைன்னா நேரா பிணவறைக்கு தான் போயிருக்கும். அதுக்கப்புறம் தான் படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுச்சு. அதுமட்டுமல்ல, கலைஞர் டிவி ஆரம்பித்த பிறகு, அந்தப் படத்தை அதில் வெளியிடச்செய்தார். 

திராவிடம்-னா என்னான்னு கேட்கிறவங்க எல்லாம் ஒரே ஒரு முறை மணிமண்டபத்தை சுத்தி பாக்கணும். உள்ள அவ்ளோ அழகா இருக்கு. அதை பார்க்க இரண்டு கண்ணு பத்தாது. ஆயிரம் கண்ணு தேவைப்படும். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலையும் முடியாது. யாருக்கும் அந்த வரலாறு கிடையாது” என்றார். மேலும், “சகோதரர் அமைச்சர் உதயநிதி. அவர் விளையாட்டா இருந்தாலும் அலர்ட்டா இருக்கணும். ரொம்ப பயங்கரமான ஆளு. அவர்கிட்ட பேசி தப்பிக்க முடியாது. பெரிய தைரியசாலி” என்றார். 

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.