Advertisment

திருவாரூர் வீடுகள் முழுவதும் கருப்புக்கொடி கட்டி கலைஞருக்கு அஞ்சலி 

kalaignar

திருவாரூரில் கலைஞர் மறைவுக்கு வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். கட்சி பாகுபாடியின்றி கலைஞரின் திருவுரு படம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக வர்த்தகர்கள் தாமாக முன்வந்து அனைத்து கடைகளையும் அடைத்துள்ளனர். மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை.

Advertisment

இந்நிலையில் திருவாரூரில் திமுக தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்தனர். மேலும் கட்சி பாகுபாடியின்றி வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து பகுதிகளிலும் கலைஞரின் திருவுரு படம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

kalaignar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe