Skip to main content

லெனின் உடலைப் போல கலைஞரின் உடலையும் பதப்படுத்துவோம்: மு. ஞானமூர்த்தி

Published on 07/08/2018 | Edited on 08/08/2018
kalaignar merina


 

தலைவர் கலைஞர் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கவேண்டும். 80 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருந்த தலைவர் என்ற தார்மீக உரிமைக்கு மரியாதை அளிக்க வேண்டும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி கேட்டதற்க்கு மறுப்பு. 

 

5 முறை தமிழக முதல்வராக இருந்த, 13 தடவை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அண்ணாவின் தம்பி கலைஞருக்கு இடமில்லையாம்.

 

 மெரினாவில் புதிய சமாதிகள் வரக்கூடாது என்பது தான் சட்டம். அதனால் தான் ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் சமாதி வளாகத்திற்கு உள்ளே வைக்கப்பட்டது. தற்பொழுது அண்ணா சமாதி வளாகத்திற்கு உள்ளே கலைஞரின் சமாதி இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. 

 

ஜெயலலிதாவை அடக்கம் செய்தபோது சட்ட சிக்கல் எங்கே போனது?. மெரினாவில் இடம் வரும் வரை தலைவர் உடல் அடக்கம் பண்ண கூடாது. அப்படி பண்ண முடிவு எடுத்தால் தொண்டர்களின் போராட்டம் வெடிக்கும். 

 

தலைவருக்கு மெரினாவில் இடம் கொடுக்கவில்லையானால், ரஷ்ய நாட்டின் அதிபர் லெனின் உடல் பதப்படுத்தப்பட்டது போல் தலைவர் உடலை பாதுகாப்பு செய்யுங்கள். 

 

நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ளட்டும். இந்த ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, நமது ஆட்சியை மலரச் செய்து கலைஞரை அண்ணாவின் நினைவிடத்திற்க்கு அருகிலேயே நல்லடக்கம் செய்வோம். இவர்களிடம் கெஞ்சவும் வேண்டாம், அஞ்சவும் வேண்டாம். தலைவரின் ஆன்ம பலத்தை பெறுவோம்.


mg






மு. ஞானமூர்த்தி
செந்துறை ஒன்றிய திமுக செயலாளர்
அரியலூர் மாவட்டம். 
 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞரின் பேனா நினைவுச் சின்னதிற்கு மத்திய அரசு அனுமதி

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

Central government sanction kalaignar pen memorial

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு  நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. 

 

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமெனவும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. 

 

 

Next Story

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்; ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Kalaignar Pen Memorial; Tamil Nadu Government letter to the Union Government

 

கலைஞருக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. 

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

 

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழ்நாடு பொதுப் பணித்துறை, ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது. கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு கடற்கரை ஒழுங்காறு மண்டலம் அனுமதி வழங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளது. 

 

இந்நிலையில், பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்தி தமிழ்நாடு பொதுப் பணித்துறை சார்பில், சென்னை மெரினாவில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.