ADVERTISEMENT
ADVERTISEMENT
திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கலைஞரின் உடலுறுப்புகளின் செயல்பாடு மோசமான நிலையை அடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காவேரி மருத்துவமனைக்கு வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் இதனை அறிந்ததும், மிகவும் கவலையடைந்தனர். எழுந்து வா தலைவா... அறிவாலயம் வா தலைவா... என்று கண்ணீர் மல்க முழக்கங்களை எழுப்பினர்.
ADVERTISEMENT
Show comments