Skip to main content

ஒருரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை; சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

Published on 01/12/2018 | Edited on 01/12/2018
kaja strom damage; CPM state secretary K.Balakrishnan condemned

 

மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. கஜா புயலுக்கு இதுவரை நிவாரணமாக மக்களுக்கு ஒரு ரூபாய் கூட போய்ச்சேரவில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கஜா புயல் தாக்குதல் சம்பவம் நடைபெற்று இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அரசு சார்பில் ஒரு ரூபாய் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வழங்கப்படவிலல்லை. கணக்கெடுப்பு பணி நடைபெறுவதாக அரசு கூறுகிறது. கணக்கெடுப்பு பணியே நடக்காமல் ஒரு முதலமைச்சர் எப்படி மத்திய அரசிடம் 4வது நாளே போய் 15 ஆயிரம் கோடி வேண்டும் என்று பிரதமரிடம் போய் மனு கொடுத்தார் என்று தெரியவில்லை. ஏன் நிவாரணம் கொடுக்கவில்லை என்றால் கணக்கெடுத்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். கணக்கெடுத்த பிறகு தான் பிரமரைச் சந்திப்பதாகவும் கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பட்ட நிலை. தமிழக முதல்வர் பிரமதரைச் சந்தித்தது கஜா புயலுக்காக சந்தித்ததாக நாங்கள் கருதவில்லை. சில அரசியல் தேவைகளையொட்டி அவர் சந்தித்தாக நாங்கள் கருதுகிறோம். அதற்கு கஜா புயலை ஒரு காரணம் காட்டியிருக்கிறார் என்ற தெரிகிறது. 

 

அதன் வெளிப்பாடுதான் தேர்தல் கமிசனே முன்வந்து 20 தொகுதிகளுக்கு இப்போது இடைதேர்தல் சாத்தியமா என்று சொல்லியிருக்கிறது. யாருமே கேட்காமல் தேர்தல் கமிசன் முந்திக்கொண்டு சொல்லியிருப்பதைப் பார்த்தால் அதன் நோக்கம் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே உடனடியாக தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இன்னமும் முகாம்களில் உள்ள மக்கள் வீடு திரும்ப முடியவில்லை. நிவாரணம் வழங்காமல் அந்த மக்களின் வாழ்வு மிகப்பெரிய சோதனைக்கு ஆளாகி இருக்கிறது. 

 

புயல் பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் அழிந்துள்ளது. இங்கெல்லாம் கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்று தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டத்தில் கணக்கெடுப்பு நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் இங்கு நடைபெறுவதாக தெரியவில்லை. தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டும் கூட பிரதமர்  மோடி இந்த பகுதிகளை வந்து பார்க்க வரவில்லை. இதனை பார்க்கும் போது தமிழகத்தை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

 

 

15 ஆயிரம் கோடிக்கு பிரதமரிடம் முதலமைச்சர் மனு கொடுத்துள்ளார். ஆனால் 200 கோடி என்ற அளவில் முதல் தவணையாக அறிவித்துள்ளது மத்திய அரசு. எவ்வளவு கொடுப்பார்கள் என்று நமக்கு நிச்சயமாக தெரியாது. பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு 2015ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி, வெள்ளம், புயல் சேததத்திற்கு மத்திய அரசிடம் கேட்ட நிவாரண தொகை 97,352 கோடி வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் மத்திய அரசு 4242 கோடி தான் வழங்கியிருக்கிறது. அதாவது  5 சதவீதம்  நிதி தான் வழங்கியிருக்கிறது. இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் போது மத்திய அரசிடம் தமிழக அரசு கையேந்துகிற நிலை உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

 

இதேபோல் மேகதாதுவில் அணைக்கட்டுகிற கர்நாடக அரசைக் கண்டித்து டிசம்பர் 4ம்  தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. கஜா புயல் பாதிப்பு தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும்  ஆர்ப்பாட்டம் செய்வது குறித்து ஆலோசித்து உள்ளோம் என்று திண்டுக்கல்லில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். பேட்டியின் போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்பட சில பொறுப்பாளர்கள் இருந்தனர்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.