Skip to main content

கஜா புயலில் உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயமும் தப்பவில்லை - படங்கள்

Published on 16/11/2018 | Edited on 16/11/2018



 

நாகப்பட்டினம் கடலோரத்தில் 150 ஆண்டுகள் பழமை கொண்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம் இருக்கிறது. அங்கு உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். கஜா புயலின் தாக்கத்தால் ஆலயத்தில் உள்ள முக்கிய இடங்கள் சிதலமடைந்து இருக்கிறது. 
 

150 ஆண்டுகள் பழமை கொண்ட மாதா ஆலயத்தின் கோபுர சிலுவை உடைந்து கீழே விழுந்துள்ளது. பழைய வேளாங்கண்ணி ஆலயத்திற்கு செல்லும் வழியில் உள்ள விண்மீன் ஆலய வளாகத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட  55 அடி உயரம் கொண்ட திரு இருதய ஆண்டவர் சிலையின் கைப்பகுதி முற்றிலுமாக சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. 
 

ஆலயப்பகுதிகளில் உள்ள  பெரும்பாலான மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்துள்ளது. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் பற்றாக்குறையும் நிலவும்சூழல் ஏற்பட்டுள்ளது.
 

இதுகுறித்து வேளாங்கண்ணி திருத்தல பேராலய பங்குதந்தை சூசைமாணிக்கம் கூறுகையில், "சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் சந்தித்த பாதிப்பு கஜா புயல் பாதிப்புதான்.
 

கஜா புயலை எதிர்கொள்வதற்கு அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறியிருந்தனர். அதற்கு ஏற்ப நாங்களும் வெளி மாவட்ட, வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் ஏதுவாக குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம். 
 

நேற்று முதல் உள்ளூர் வெளியூர் சுற்றுலா, மற்றும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர், உடமைகள் பேராலய நிர்வாகத்தின் சார்பில் இலவசமாக வழங்கி வருகிறோம். இருந்தும் எதிர்பாராதவிதமாக புயலின் தாக்கம் அதிகமானதால் மின்சாரம் முற்றிலுமாக தடைபட்டுவிட்டது. ஆங்காங்கே மின் வயர்கள் சேதமடைந்திருப்பதால்  தண்ணீர் தேவையே சரிசெய்து கொடுக்கும் பணிகள் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளது.
 

இந்நிலையில் அதற்கு பேராலய நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்துவருகிறது. குறிப்பாக வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருக்கும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 

இதுமட்டுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்து கொடுப்பதற்கு அரசு அதிகாரிகளின் துணையோடு பேராலய நிர்வாகம் செய்து வருகிறது" என்றார் அவர்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.