Skip to main content

கஜா புயல் சீரமைப்பு-நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

 

 storm renovation - holiday announcement for four districts

 

சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளால் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்