Skip to main content

இன்னும் கிடைக்காத கஜாபுயல் நிவாரணம்; ஆதார், ரேசன், வாக்காளர் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு!!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

கஜாபுயலால் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்காத மாவட்ட நிர்வாகத்தையும், அதிமுக அரசையும் கண்டித்து காமேஸ்வரம்  மீனவர்கள்  தங்களின் ஆதார், வாக்காளர், குடும்ப அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

kajastrom

 

கஜா புயலடித்து 75 நாட்களை கடந்துவிட்டது. நாகை, திருவாரூர்  மாவட்ட மக்களுக்கு நிவாரணம்  வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். அதனால் தினமும் பல இடத்தில் போராட்டம் நடந்தபடியே  உள்ளது. அந்தவகையில் படகுகள் மற்றும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை  என அனைத்தையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க காமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.

 

kajastrom

 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட மீனவர்களை நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த  மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறைக்கு எதிராகவும், இதுவரை நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 

kajastrom

 

"கஜா புயலினால் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்து தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம். வலைகள், தளவாட பொருட்களின் கணக்கெடுப்பு பணிகள்கூட  இதுவரை நடக்கவில்லை. " என்றனர்.

 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கஜா புயல் நிவாரணம் வழங்காத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அரசால் வழங்கபட்ட ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை நாகை வட்டாட்சியர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். கஜா  நிவாரணம் அறிவித்தும் இதுவரை நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து நாகையில் மீனவர்கள் ஆதார், வாக்காளர் உள்ளிட்ட அட்டைகளை ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.