Skip to main content

நிவாரணப்பொருட்களை ஆட்டைய போட்ட தாசில்தார்; போஸ்டரால் பரபரப்பு!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

தொண்டு நிறுவனங்கள் கஜாபுயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பொருளாக வழங்கியதை, திருக்குவளை தாசில்தார் தனது சொந்தத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு கரையை கடந்த கஜாபுயல் வேதாரணியம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை பேரழிவுக்கு உட்படுத்தி விட்டு சென்றது. அதிலிருந்து இன்னும் மீளாத்துயரில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். ஏராளமான வீடுகளும், மரங்களும் சாய்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையே முடக்கிப் போட்டது.

 

kaja

 

 

இந்தசூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு  27 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் அறிவித்தது. அது முழமையாக பலருக்கும் கிடைத்திடவில்லை. அதேபோல் தனியார் தொண்டு நிறுவனங்களும் தன்னார்வலர்களும், மாணவர்களும், தாமாகவே முன் வந்து தங்களால் முடிந்த உதவிகளை ஓடிவந்து செய்தனர்.

 

இந்தநிலையில் நாகை மாவட்டம் திருக்குவளைக்கு ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் 1200 ரூபாய் மதிப்பில் 700 குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்காமல் திருக்குவளை தாசில்தார் தனது சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொண்டதாக வால்போஸ்டர் தாலுக்கா முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது.

 

 இந்த வால்போஸ்டரில், திருக்குவளை தாசில்தார் ஶ்ரீதேவியை வன்மையாக கண்டிக்கிறோம் என தலைப்பிட்டு. கஜாபுயலால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு வீடு இழந்தவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் 700 பேருக்கு வழங்கிய விலை உயர்ந்த நிவாரணப் பொருட்களை தாசில்தார் ஸ்ரீ தேவி கார், வேன் வைத்து அவரது சொந்த உபயோகத்திற்காக திருடி சென்றதை வன்மையாக கண்டிக்கிறோம். மாவட்ட நிர்வாகமே ஏழை எளியோருக்கு அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை திருடி சென்ற தாசில்தார் ஸ்ரீதேவி மீது நடவடிக்கை எடு.

 

 இப்படியொரு போஸ்டர்கள் திருக்குவளை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அப்பகுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். 

Next Story

போராடினால் 20,000 ரூபாய் அபராதம்; பல்கலைக்கழகத்தின் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு 

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
20,000 rupees fine for fighting; Students protest against the university's announcement

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு அங்கு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பலமுறை கலவரத்திலும் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் போராடினால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் மாணவர்கள் தர்ணா அல்லது சுவரொட்டிகளை ஒட்டினால் 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேச விரோத செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வகுப்புவாத, சமூக மோதல் அல்லது தேச விரோத கருத்துக்களைக் கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழகத்தில் ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.

உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடும் மாணவருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். படிக்கும் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படுவர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விவரம் குறித்த நகல் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் கருத்துரிமையை நொறுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.