Skip to main content

புயலில் இழந்த மரங்களை மீட்கும் முயற்சி! 

Published on 17/11/2019 | Edited on 17/11/2019

கடந்த ஆண்டு (16/11/2019) இதே நாளில் கஜா புயலால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் தென்னை விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தென்னை சார்ந்த தொழிலாளிகள் இன்றளவும் வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
 

தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பேராவூரணி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து படித்து வெளிநாடு, வெளியூர்களில் நல்ல சம்பளத்தில் வேலைக்கு சென்ற இளைஞர்கள் புயல் அடித்து நம்மை படிக்க வைத்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டது என்பதை அறிந்து சொந்த ஊர்களுக்கு வந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மாற்று கன்றுகளை நட்டு முடிக்கும் போது தண்ணீர் பிரச்சனை எழந்தது.

kaja cyclone impact trees thanjavur district peoples and youngsters


பல வருடங்களாக காவேரித் தண்ணீரும் கடைமடைக்கு வருவதில்லை. அதனால் தான் தென்னைக்கு மாறினோம். 30 வருடங்களுக்கு மேலாக பராமரிக்கப்படாத ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்குவதில்லை. அதனால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. நட்ட தென்னை, தேக்கு, பலா, மா என்று மரக்கன்றுகளை வளர்க்க தண்ணீர் வேண்டுமே.. என்ன செய்வது ஆலோசித்தார்கள் இளைஞர்கள்.. நமக்கு நாமே நிலத்தடி நீரை சேமிக்களாமே என்று முடிவெடுத்தனர். அதன்படி கைஃபா என்ற அமைப்பு உருவானது.

kaja cyclone impact trees thanjavur district peoples and youngsters


நிலத்தடி நீரை சேமிக்க ஏரி, குளம், குட்டை, வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் என்ற நிலையில் முதலில் 560 ஏக்கர் பரப்பளவுள்ள பேராவூரணி பெரிய குளத்தை மீட்க முடிவெடுத்து களமிறங்கினார்கள். சில மாதங்களில் குளத்தை மீட்டனர். மீட்டு முடிந்த போது கல்லணை தண்ணீர் வந்து சேர்ந்தது. குளம் நிரம்பியது. கைஃபா வை தொடர்ந்து பல கிராமங்களிலும் இளைஞர்கள் கூடி நீர்நிலைகளை பாதுகாக்க சொந்த பணத்தையும், உழைப்பையும் மூலதனமாக்கி மீட்டனர். மீட்கப்பட்ட நீர்நிலைகளின் கரைகளில் மரக்கன்றுகளை வளர்க்கவும், நீர்நிலைகளின் குருங்காடுகளையும் வளர்க்க அடுத்த திட்டம் வகுத்தனர். அதன்படி குருங்காடுகள் அமைக்கப்பட்டது.

kaja cyclone impact trees thanjavur district peoples and youngsters


இன்று நவம்பர் 16 கஜா ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேராவூரணி பெரிய குளத்தின் கரையில் ஒரு கி.மீ தூரத்திற்கு குழந்தைகள், தம்பதிகள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், கைஃபா அமைப்பினர், விவசாயிகள் என்று அனைவரும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டனர். புயலில் இழந்த மரங்களைவிட 5 மடங்கு மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்றனர் இளைஞர்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு உத்தரவு!

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

Auroville Foundation instructed not to cut down trees!

 

வனப்பகுதியில் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்காக மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

 

சுற்றுச்சூழல் ஆர்வலர் நவ்ரோஸ் மோடி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரோவில் அறக்கட்டளை, எந்த வித அனுமதியும் இன்றிக் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போது சுற்றுவட்ட சாலை அமைப்பதற்காக வனப்பகுதி எனக் கருதப்படும் இடத்தில் ஏராளமான மரங்களை வெட்டியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மரங்களை வெட்டக் கூடாது என ஆரோவில் அறக்கட்டளைக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இந்த மனுவிற்கு பதிலளிக்கும் படி, தமிழ்நாடு அரசுக்கும், ஆரோவில் அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிசம்பர் 17- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.  

 

Next Story

கலைஞர் நினைவுநாளில் புதிய திட்டத்தைத் தொடங்கிவைத்த முதலமைச்சர் (படங்கள்)

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு லட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கிவைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நாகலிங்க மரக்கன்றை நட்டு தொடங்கிவைத்தார்.

 

இந்த நிகழ்வில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.