இன்று காலை புயலின் வேகம் 14 கி.மீ. ஆக இருந்தது. இது தற்போதுமணிக்கு 23 கி.மீ. என்றவேகத்தில் நாகையை நோக்கிநகர்கிறது. புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 338 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 328 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.

Advertisment

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துகொண்டிருக்கின்ற வேளையில், சென்னை எழிலகத்திலுள்ளமாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில்புதிய அமைப்பை தொடங்கிய வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கஜாபுயல் நம்மை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருக்கிறது, தயாராக இருக்கவேண்டும்என கூறினார்.