Skip to main content

“ஒருபுறம் தண்ணீரில் தவிக்கிறோம், மறுபுறம் தண்ணீருக்காகவே தவிக்கிறோம்” - ஒரு கிராமத்தின் சோகம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Kaduvetti villagers suffering without drinking water

 

மழைக்காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீரைப் பிடித்து சைக்கிளிலும் தலையிலும் சுமந்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது காடுவெட்டி கிராமம். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கடல்நீர் புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் உப்பாக மாறிவிட்டது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கோடியக்கரை வரை தடையின்றி போகிறது. ஆனால், ஆற்றின் கரையை ஒட்டியே இருக்கும் இந்த மக்களுக்கோ தண்ணீர் கிடைப்பதில்லை. 

 

"கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால் அடிப்படை உபயோகத்திற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம்" என்று கூறியபடியே அந்த கிராமத்துப் பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களைக் கட்டிக்கொண்டும் அடுத்தடுத்த கிராமத்திற்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர்.

 

Kaduvetti villagers suffering without drinking water

 

"மழைக்காலத்தில் ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் போகும். ஆனால், குடிதண்ணீர் எடுப்பதற்கு இதைவிட பெரும் சிரமப்பட்டே எடுத்து வருவோம். வெளியே செல்ல முடியாத மழைக்காலத்தில் எங்கள் நிலைமை மோசமாகிடும் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடிப்பதிலே அவர்களின் நேரம் கடந்துவிடும். காலதாமதமாக பள்ளிக்கூடம் போக நேரிடும்" என்கிறார்கள் அந்த கிராமத்துப் பெண்கள்.

 

“இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருந்தும் எந்த பயனும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால், கடல்நீர் உட்புகுந்து கொள்ளிடம் ஆற்று நீர் முற்றிலும் உப்பாக மாறியதால் ஆற்றுநீரைக் கூட பயன்படுத்த முடியாத அவல நிலையாகிடுச்சி. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு நாங்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆடு, மாடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். தமிழக அரசும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி கிராமத்திற்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.