Skip to main content

தனிமைப்படுத்தும் முகாமில் அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு! முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக எம்.எல்.ஏ. அறிவிப்பு!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020

 

mla

 

வெளிமாவட்டமல்ல, வெளிநாடுகளிலிருந்தும் கூட கொடூரக் கரோனாத் தொற்றிற்கு அச்சப்பட்டு மக்கள் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித் திரும்புவர்கள் மூலமாக உள்ளூரில் தொற்று பரவாமல் தடுக்க, அவர்கள் வருகிற பார்டர் செக் போஸ்ட்களில் சோதனை செய்யப்பட்டு கரோனா பாசிட்டிவ் என்றால் சிகிச்சைக்கும் நெகட்டிவ் என்றால் அந்தப் பகுதியிலுள்ள தனிமைப் படுத்துதல் பகுதிகளில் குவாரண்டைன் செய்யப்படுகிறார்கள்.

 

அது போன்ற அரசு குவாரண்டைன் முகாம்களில், அவர்களுக்கான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர், கழிப்பிட வசதிகள் சரியில்லை. பெருந் துயரை அனுபவிக்கிறார்கள் என்கிற புகார்கள் கிளம்புகின்றன. இதனை அறிந்த தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூரின் எம்.எல்.ஏ.வான முகமது அபுபக்கர் நாளை கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். கரோனாத் தொற்று அச்சம் காரணமாக வேலையின்றியும் துபாயில் தவித்த 89 தமிழர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அயலாக அமைப்பான அமீரகக் காயிலேத் மில்லத் பேரவை சார்பில் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த ஜூன் 28ஆம் தேதி தமிழகம் அழைத்து வந்தனர். இதற்கான வேலைகள், செலவுகளை தன் சொந்தச் செலவின் மூலம் மேற்கொண்டார் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வான முகம்மது அபுபக்கர்.

 

திருவனந்தபுரத்திலிருந்து அவர்கள் புளியரை சோதனைச் சாவடி வழியாகக் கடையநல்லூர் அழைத்து வரப்பட்டவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தி ஆறு நாட்களாகியும் சோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் 4 குழந்தைகளும் அடக்கம்.

 

இதனிடையே முகாமில் சாதாரணமாக அடித்தட்டு வசதியான டாய்லெட், உணவு, குடிநீர் கூட முறையாக அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படாததால் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். இதனையறிந்த எம்.எல்.ஏ. அபுபக்கர் காலதாமதமில்லாமல் சோதனை முடிவை அறிவிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெண்களை விடுவிக்கவேண்டும் என வலியுறுத்தி நாளை கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்துள்ளார்.

 

அவரிடம் நாம் பேசினோம்,

 

இக்கட்டான காலம் இது. பரிசோதனை முடிவு வரத் தாமதமாவது தொற்றுப் பரவலை அதிகரிக்கச் செய்துவிடும். 6 நாட்களாகியும் முடிவுகள் அறிவிக்கப்படாமல் முகாம்களில் கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோரும் அடிப்படை வசதி இல்லாமல் அல்லல்படுவதோடு மன உளைச்சலில் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டும் என்பது விதி. முறையான உணவில்லை, டாய்லெட் போனால் பக்கெட் கிடையாது. சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விதிப்படி, கர்ப்பிணிப் பெண்களை அவர்களின் வீடுகளிலேயே தனிமைப் படுத்தல் செய்யப்பட வேண்டும், என்று கலெக்டர் தாசில்தார், தலைமைச் செயலர் சண்முகம் என அனைவரிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 

எனவே அவர்களை விடுவிக்கக்கோரி ஜூலை 6ஆம் தேதி திங்கள்கிழமை எனது தலைமையில் தாலுகா அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்கிறார் எம்.எல்.ஏ.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்? - இன்று வெளியாகும் அறிவிப்பு

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
By-elections to inform?-Notices released today

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சாந்து  ஆகியோர் நேற்று முன்தினம் பதவி ஏற்று கொண்டனர். அதேநேரம் நாடு முழுவதும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. தயார் நிலையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ளன. தொடர்ந்து தேர்தல் தேதியை முடிவெடுப்பதற்கான தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று  பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியோடு சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வெளி மாநிலங்களில் இருந்து ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி சாத்தியமா?' - அப்பாவு விளக்கம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'MLA post for Ponmudi'-Speaker Appa's explanation

சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.