Skip to main content

“நடுக்காட்டுப்பட்டியில் நடந்ததை நாட்டுக்கே வெளிச்சம்போட்டு..”-கடம்பூர் ராஜு வெளிப்படை!

Published on 02/11/2019 | Edited on 02/11/2019

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனவாள மாமுனிகள் ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்ட  தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார்.  
 

kadambur raju

 

 

“உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத் தேர்தலைப் போல அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் நூறு சதவீதம் வெற்றி பெறும்.   உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்று யார் சொன்னது?   அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் எங்களது கட்சியில் கிடையாது.  தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.  புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிக்கையாளர் நல வாரியக் குழு  அமைக்கப்படும் புது படத்தை சிறப்பு  காட்சி என்ற பெயரில்,  அரசு நிர்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு,   இரண்டு, மூன்று  காட்சிகள்  ஒளிபரப்புவதால்தான் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.   இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்குத்  தனி கட்டணம் வசூலித்து அனுமதிக்கப்படும்.  

நடுக்காட்டுப்பட்டியில் நடந்ததை ஊடகத்துறை மூலமாக நாட்டுக்கே வெளிச்சம்போட்டு..  ஊடகத்துறையினர் அத்தனை பேரும் மூன்று நாட்கள் லைவ் ஆகக்காட்டி..  என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை மக்கள் அறிவார்கள். இன்னும் சொல்லப்போனால், அது பொது இடத்தில் இருந்த ஆழ்துளைக்கிணறு அல்ல. அவர்களுடைய சொந்த இடத்தில் அஜாக்கிரதையால் நடந்த நிகழ்வு என்பது ஊருக்கே வெளிச்சமாகத் தெரியும். இதிலிருந்து ஸ்டாலினின் மனப்பான்மையை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளலாம். நீங்களும்.. ஊடகத்துறையினரும் இந்த அபத்தமான குற்றச்சாட்டை மக்கள் முன்வைக்க வேண்டும்.” என்றார்.

உயிரோடு சுஜித்தை மீட்க முடியாமல் அரசுத்தரப்பு சந்தித்த தோல்வியை ஏற்க கடம்பூர் ராஜுவுக்கு மனம் இல்லை போலும்!  பரவாயில்லையே! அரசுத்தரப்பிலும், அதிமுக தரப்பிலும் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை சுஜித்தின் குடும்பத்திற்குத் தந்துவிட்டு, பெற்றோரின் அஜாக்கிரதையால்தான் அந்த மரணமே நிகழ்ந்தது என்று வெளிப்படையாகச் சொல்கிறாரே!  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள்' - கடம்பூர் ராஜு பகீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பிற்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழ்நிலையில் திமுக தொகுதிப் பங்கீட்டிற்கான இறுதி பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தற்போது வரை கூட்டணிக்கான கதவுகளை திறந்தே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே கூட்டணி பிளவு கண்டிருந்த அதிமுக, பாஜக கட்சிகள் ஒன்றை ஒன்று விமர்சிக்காமல் இருந்த நிலையில், தற்போது மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார்.

முன்னரே கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த எடப்பாடி பழனிசாமி, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டாம் என  கட் அன்ட் ரைட்டாக பேசியிருந்தார். எடப்பாடியின் இந்த பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் அதிமுக, பாஜக வார்த்தை மோதல்கள் அதிகரித்தது. லேகியம் விற்பனை, வாய்க்கொழுப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் விமர்சனங்களை பாஜகவை நோக்கி வைத்தனர். ஆனால் மாற்றாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அதிமுகவின் தலைவர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரைப் புகழ்ந்து பேசியது மீண்டும் பாஜக, அதிமுக கூட்டணிக்கு அடித்தளமிடும் செயல் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

admk

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிமிடம் வரை பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறது. பாஜக வலுவாக இருந்தால் அதிமுகவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜகவின் வாக்கு விகிதம் அதிகரித்திருப்பதாக வரும் கணிப்புகள் எதுவும் உண்மை இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை சேர்க்க பாஜகவினர் ஆள் மேல் ஆள் அனுப்புகிறார்கள். அதிமுக பலமாக இருப்பதால் பாஜக எங்களுக்காக காத்திருக்கிறது. இல்லையெனில் ஏன் காத்திருக்க வேண்டும்?' என்ற கேள்வியை வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

Next Story

“விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது” - கடம்பூர் ராஜு

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

"DMK fears Vijay" - Kadampur Raju

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 

 

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “விஜய்யை பார்த்து திமுக அஞ்சுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்கக் கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.

 

ஆனால், தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது” என்று தெரிவித்தார்.