நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை திரையிடும் திரையரங்குகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இது சம்பந்தமாக உள்துறைச் செயலாளர், வருமானவரித்துறை தலைமை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு மனு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்தத் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு வரை கூடுதலாக வாய்ப்புள்ளதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என வேண்டும் என விதிக்க வேண்டும் என வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.