Skip to main content

கும்பி எரிகிறது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா? கி.வீரமணி

Published on 06/04/2018 | Edited on 06/04/2018


 

K. Veeramani

கும்பி எரிகிறது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா என்று கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியை உடனே தள்ளிப்போடுங்கள் என்று கூறியுள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி பாலைவனமா கிடும் அவலம், கருநாடகாவின் முரண்டு, பிடிவாதத்தாலும், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாலும் தமிழ்நாடே போராட்ட களமாக மாறி விட்டது.
 

இங்குள்ள ஒரு மாநில அரசு ஏனோ தானோ, ஒப்புக்கு அழுதவன் கதையாக, கபட நாடகம் ஆடுகிறது!
 

மத்திய அரசுக்கு போதிய அரசியல் அழுத்தம் கொடுத்து, தமிழ்நாட்டு மாநில உரிமைகளை - அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறி விட்ட நிலையில், மக்கள் ஆங்காங்கே, தாங்களே குமுறி கொந்தளித்து எழுந்து போராட்டக் களத்தில் குதித்திடும் இவ்வேளையில், கிரிக்கெட் அய்.பி.எல். என்று கேளிக்கை - சூதாட்டம் பந்தயத்திற்கு வாய்ப்பு அளிக்கும் போக்கில்  நடத்திட முன்வருவது பட்டினியால் வாடும் விவசாயிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பற்றிக் கவலைப்படாத ஒரு போக்கு. இதனைத் தடுத்து நிறுத்தி, இப்பிரச்சினை முடிவுக்கு வரும் வரை, இந்த கிரிக்கெட் என்ற தறிகெட்ட  பந்தய ஆட்டங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். கும்பி எரியும்போது கோலாகல கிரிக்கெட் ஒரு கேடா?
 

வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  உடனே தள்ளிப் போடுங்கள்.
 

இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கரோனா உறுதி!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

jl

 

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, இந்தியாவில் முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு கரோனா தொற்று தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  அவர் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

 

 

Next Story

அராஜக ஆட்சி விடை கொடுத்து அனுப்பப்படும்: கி.வீரமணி 

Published on 06/04/2021 | Edited on 06/04/2021

 

K. Veeramani

 

சென்னை அடையாறு காமராஜ் அவின்யூ 2 ஆவது சாலையில் அமைந்திருக்கும் பாப்பான்சாவடி சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (6.4.2021) காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருண்ட ஆட்சிக்கு விடை கொடுக்கும் தேர்தல், இன்றைய தேர்தல் என்பது தமிழக சட்டமன்றத்திற்கு அதன் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் அருமையான ஜனநாயகப் பரிசோதனையாகும். மக்களாட்சியினுடைய தத்துவம், மாண்பு காப்பாற்றக் கூடிய வகையில், கடந்த பத்தாண்டுகாலமாக இருந்த ஓர் இருண்ட ஆட்சிக்கு விடை கொடுத்து, இருட்டை நீக்கி புதிய வெளிச்சத்தை உருவாக்குவதற்கு மக்கள் எல்லோரும் தயாராக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த வாக்களிப்பு இன்றைக்கு நடைபெறுகிறது.

 

முந்தைய தேர்தல்களில் வேட்பாளர்கள் வாக்காளர்களைத் தேடினார்கள். இந்தத் தேர்தலினுடைய தனிச் சிறப்பு - கரோனா காலமாக இருந்தாலும், வாக்காளர்கள் ஒரு விடியலை நோக்கி, அது வரவேண்டும் என்பதற்காக வேட்பாளர்களைத் தேடி அழைத்து, முன்பே தயாராகிவிட்டார்கள்.

 

மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும். எனவே, ஜனநாயகம் தமிழ்நாட்டில் தழைக்கும். அண்ணா உருவாக்கிய உண்மையான ஆட்சி - தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் பூத்துக் குலுங்கும்! மக்களுடைய நல்வாழ்வு உறுதி செய்யப்படும்! இதற்கு முன்பு இருந்த அராஜக ஆட்சி விடை கொடுத்து அனுப்பப்படும். இதுதான் வெற்றியின் அடையாளம்! இவ்வாறு கி.வீரமணி கூறினார்.